பக்கம் எண் :

830பால காண்டம்  

என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும். உன் உரத்துக்கு ஈடு அன்றால்.
 

பொன்னுடை    வனைகழல்   -    பொன்னால்   செய்யப்பட்டு
அணிதற்குரிய  வீரக்   கழலையும்;  பொலம்  கொள்  தாளினாய் -
அழகினையும்   கொண்ட  திருவடிகளையுடையவனே!;  மின்   உடை
நேமியான்  ஆதல்   மெய்ம்மையால்  
-  நீ  மின்னுகின்ற  சக்கரப்
படையை  ஏந்திய  திருமால்  என்பது உண்மையானதால்; உலகினுக்கு
இடுக்கண்  என் உளது?  
-  இனி.  உலகத்து  மக்கட்கு (நிகழவுள்ள)
துன்பங்கள்  எப்படி  இருக்கும்?; யான் தந்த உன்னுடை வில்லும் -
நான்  இப்பொழுது  உனக்குத்  தந்த (பழைய)  உன்னுடைய  வில்லும்;
உன்  உரத்துக்கு ஈடு  அன்று  
-  உன்னுடைய  வலிமைக்கு ஏற்றது
ஆகாது.  

இராமனை     இறைவனாகக்  கொண்டு   திருவடிகளை    முதலில்
வருணித்தான்.  உரம்: வலிமை.  மார்பு எனக்  கொண்டு. வில் வளைத்த
நேர்த்தி  கண்டு  மார்பினைப்   புகழ்ந்தவாறுமாம்.   ஆகவே. இராமன்
“கைவண்ணமும்    கால்வண்ணமும்”  (கம்ப.  475)   கண்டு  கௌசிக
முனிவர்.  “இனி  இந்த  உலகுக்கு   எல்லாம்   உய்வண்ணம்  அன்றி
மற்றோர்   துயர்வண்ணம்   உறுவதுண்டோ?”    (கம்ப.  475)  என்று
மகிழ்ந்தது போலவே அவை கண்டு. பரசுராமனும்  இங்கு. “என்  உளது
உலகினுக்கு இடுக்கண்?” என்கின்றான் என்க.                    38
   

1301.‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல். என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என.
கை அவண் நெகிழ்தலும். கணையும் சென்று. அவன்
மை அறு தவம் எலாம் வாரி. மீண்டதே.

 

எய்த   அம்பு- (நீ இப்போது) எய்யப்  பிடித்திருக்கிற அம்பானது;
இடை பழுது  எய்திடாமல்  
-  இடையிலே வீணாகாதபடி; என் செய்
தவம்   யாவையும்   
-  என்னால்  செய்யப்பட்ட  தவத்தின்   பயன்
அனைத்தையும்;  சிதைக்கவே  என - (இலக்காகக் கொண்டு)  அழிக்க
வேண்டுகிறேன்  என்று  பரசுராமன் கூற; அவண் கை நெகிழ்தலும் -
அப்போது.  இராமனின்  கை நெகிழ்ந்த உடனே; கணையும் சென்று -
அம்பும்  உடனே  சென்று; அவன் மையறு தவம்எலாம் - பரசுராமன்
ஈட்டியிருந்த  தவத்தின்  பயன்கள்  யாவற்றையும்;  வாரி மீண்டது  -
வாரிக்   (கவர்ந்து   கொண்டு)   (அம்பறாத்    தூணியை)   மீண்டும்
வந்தடைந்தது.
   

எய்யவிருக்கிற    அம்பு விரைவு கருதி. “எய்த அம்பு” எனப்பட்டது
கால வழுவமைதி. இராமன் அம்பு பூட்டிய  பிறகு.  இலக்கையடையாமல்
திரும்பியதில்லை  என்னும்  மரபு  இடையே   என்னால்   பழுதடைய
வேண்டா  என்பான்.  “இடை  பழுது  எய்திடாமல்”  என்றான்.  தவம்:
தவத்தின்  பயனைக்  குறித்து  நின்றது.   இராமன்  அம்பு  பரசுராமன்
தவத்தின்    பயனையெல்லாம்    கவர்ந்தது  என்பதனால்   உருவற்ற
அருவத்தையும்  அது  இலக்காகக்   கொள்ளும்   வன்மையது என்பது
உணர்த்தியவாறு.                                           39