கடல் - அவன் இறங்கி அமிழ்ந்திருந்த பெரிய துயர்க்கடலிலிருந்து; கரை நின்று ஏற்றினான் - கரை ஏற்றினான். தசரதன் மண்ணில் கிடக்கவில்லை வரம்பற்ற துக்க வாரிதியுள் மூழ்கிக் கிடந்தான் என்பார். “இழிந்த வான் துயர்க்கடல்” என்றார். துக்கசாகரத்தில் மூழ்கிக்கிடக்கும் எண்ணற்ற உயிர்களைப் பிறவிக் கடலிலிருந்து கரையேற்ற வந்துள்ள பெருமான். தன் தந்தையையும் துயரக் கடலிலிருந்து மீட்டான் என்பார். “துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான்” என்றார். தனக்காக உயிர் குலைந்து. உருகிக் கிடக்கிற தந்தை நிலைகண்டு. பெருமான் தானும் உருகி. அன்பு பொங்கி வழியத் தொழுது. தந்தையைத் துக்க சாகரத்திலிருந்து கரையேற்றி ஒரு மகனுக்கு இலக்கணமாயினான் என்க. 41 தசரதன் களிப்புக் கடலுள் ஆழ்தல் |