பக்கம் எண் :

  பரசுராமப் படலம்835

ரதன்;     அண்ணல்  அப்பரதனை  நோக்கி  -   பெருமைக்குரிய
அப்பரதனைப்  பார்த்து;   எண்ணருந்  தகையது  ஓர்  பொருள் -
யாவரும் எண்ணாத ஒரு பொருளை; இயம்புவான் - சொல்லலானான்.  

மார்ச்சனை:       தோற்கருவிகள்      சிலவற்றுள்      தக்கவாறு
ஒலியெழும்புதற்கேற்ப  அடிக்கும்  இடத்தைத்  தகுதியாக  அமைத்தற்கு
உதவுவது.  “அண்ணல் அப்பரதன்” எனும்  தொடரில்  அடைமொழிகள்
பரதன் மாட்டுக் கவிஞர் பிரானுக்குரிய  மதிப்பினைக்  குறித்து  நின்றன.
இராமனுக்குப்  பட்டம் சூட்ட வேண்டும்;  அதற்குப்  பரதன்  தடையாய்
இருத்தல்கூடும்   என்று    தயரதன்   எண்ணியிருக்கலாம்   என்பதை.
ஒருவாறு  உய்த்துணருமாறு. “எண்ணருந்தகையது  ஓர்பொருள்”  எனும்
தொடரைக் கவிஞர் பிரான் அமைத்தார் எனக் கருதலாம்.          46
 
  

1309.‘ஆணையின் நினது மூதாதை. ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்.
கேணியில் வளை முரல் கேகயம் புக.
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி என்றனன்.

 

‘ஐய!   - ஐயனே!; மூதாதை ஆணையின் - உன்னுடைய பாட்டன்
(இட்டுள்ள அன்புக்)  கட்டளையின் வண்ணம்; நிற்காணிய  விழைவது
ஓர்  கருத்தன்  
-  உன்னைக்  காண  விரும்புகின்ற கருத்துடையவன்
(எனத்  தெரிகிறது); ஆதலால் -  ஆகவே;  கேணியில் வளை முரல்
கேகயம் புக
-  நீர்நிலைகளிலே (ஓயாது) சங்குகள் ஒலித்தற்கு இடமான
(நீர்வளமிக்க) கேகய நாட்டிற்குச் செல்ல; பூண் இயல் மொய்ம்பினாய்!;
-  
அணிகள் விளங்கும் மார்பினையுடைய பரதனே!; போதி என்றனன்
- புறப்படுவாயாக! என்று கூறினான் (தசரதன்).  

பரதனின்     தாய் மாமன் யுதாசித்து. தன் தந்தை தான் பரதனைக்
காண  அழைத்து  வருமாறு  இட்ட  கட்டளைப்படி   அயோத்தி  வர.
அவர்கள்    திருமணத்திற்காக     மிதிலை    சென்றிருப்பதையறிந்து
மிதிலைக்குச்  சென்று. அவர்களோடேயே அயோத்தி  வந்து.  பரதனை
அழைத்துச்  செல்லக் காத்திருந்தனன் எனும் முதல்  நூற்  கதைப்பகுதி
இங்கு  விளக்கம்  பெற  உதவும்.  மூதாதை - பாட்டன்;  மாதா மகன்.
மொய்ம்பு  -  வலிமை.  ஆகுபெயராய் மார்பினைக் குறித்தது. மங்கல
நாதமாகிய சங்கொலி நீர்நிலைகள் எல்லாம்  ஒலித்துக்  கொண்டிருக்கும்
மங்கல நாடு கேகயம் என்பதாம்.                              47
   

                                       பரதன் கேயகம் செல்லல்
  

1310.ஏவலும். இறைஞ்சிப் போய். இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து. போயினான்
-
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்.
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே.
 

ஏவலும் -  (சக்கரவர்த்தியாகிய  தந்தை)  (இவ்வாறு) கட்டளையிட்ட
பொழுதில்; இறைஞ்சிப் போய் - (பரதன் தந்தையை) வணங்கிச்