| 4. | மாதுளங் கனியை. சோதி வயங்கு இரு நிதியை. வாசத் தாது உகு நறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை. மோது பாற்கடலின் முன்நாள். முளைத்த நால் கரத்தில் ஏந்தும் போது தாயாகத் தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம். |
மாதுளங்கனியை - மாதுளங்கனி போன்ற நிறத்தினளை; சோதி - ஒளி; வயங்குதல் - விளங்குதல்; நிதி - செல்வம்; தாது - மகரந்தம்; உகு - சிந்தும்; துணை - இரண்டு; போது - மலர்; தாய் - இலக்குமி. |
| 5. | பராவ அரு மறை பயில் பரமன். பங்கயக் கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான். அரா - அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய இராகவன். மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம். |
பராவ அருமறை-போற்றுதற்கரிய வேதங்கள்; பங்கயம் - தாமரை; கராதலம் - கைகள்; அராவனை - பாம்புப்படுக்கை; இராகவன் - இராமன்; இறைஞ்சி - வணங்கி. |
| 6. | கலங்கா மதியும். கதிரோன் புரவிப் பொலன் கா மணித் தேரும். போகா இலங்கா புரத்தானை. வானோர் புரத்து ஏறவிட்ட சரத்தானை. நெஞ்வே! தரி. |
கலங்கா- கலங்காத; மதி - சந்திரன்; கதிரோன் - சூரியன்; பொலன் - அழகிய; இலங்காபுரத்தான் - இராவணன்; சரம் - அம்பு; சரத்தான் - இராமன்; தரி - தரிக்கச் செய்: |
| 7. | ‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர் பார் ஆளும் பாதம் பணிந்து. ஏத்துமாறு அறியேன்; கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு ஆராதனை என் அறியாமை ஒன்றுமே. |
நல் நெஞ்சர்- நல்ல மனமுடைய சான்றோர்; ஏத்துமாறு - போற்றும் வகை; கார் - மேகம்; கருணாகரன் - கருணை வடிவினன்; மூர்த்தி - வடிவம்; ஆராதனை - நிவேதனம். |