பக்கம் எண் :

840பால காண்டம்  

8.பராவரும் இராமன். மாதோடு
   இளவள் பின் படரக் கான் போய்.
விராதனை. கரனை. மானை.
   கவந்தனை. வென்றிகொண்டு.
மராமரம். வாலி மார்பு.
   துளைத்து. அணை வகுத்து. பின்னர்.
இராவணன் குலமும் பொன்ற
   எய்து. உடன் அயோத்தி வந்தான்.

 

பராவரும்    -  துதிப்பதற்கு  அரிய;  மாது -  சீதை; இளவல் -
இலக்குவன்;  பின்படர - பின்தொடர்ந்து வர; கான் - காடு; துளைத்து
-  துளைசெய்து;  அணை  வகுத்து  - அணை அமைத்து; பொன்ற -
அழிய; எய்து - அம்பெய்து.
  

9.தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட.
குருகை நாதன் குரை கழல் காப்பதே.

 

தருகை  -   தருகின்ற கை (வினைத் தொகை) ; வேழம் - யானை;
திருகை  வேலை  
- சூழ்ந்துள்ள கடல்; குருகைநாதன் - திருக்குருகை
நாதனான  நம்மாழ்வார்;  குரை  -  ஒலிக்கும்;  கழல்  -  பாதங்கள்;
காப்பதே
- காக்குமாக.
  

10.அஞ்சிலே ஒன்று பெற்றான்.
   அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
   ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
   அவன் எம்மை அளித்துக் காப்பான்.

 

அஞ்சிலே  ஒன்று  -  காற்று;  அஞ்சிலே  ஒன்றை  -  கடலை;
அஞ்சிலே  ஒன்று   ஆறு  ஆக  
-  வான்  வழியாக; ஆருயிர்  -
சீதாபிராட்டியின்  உயிர்;  அஞ்சிலே ஒன்று பெற்ற - நிலமகள் பெற்ற;
அணங்கு
- சீதை; அயலார் - பகைவர்; அஞ்சிலே ஒன்று - நெருப்பு.
  

11.எவ் இடத்தும். இராமன் சரிதை ஆம்
   அவ் இடத்திலும். அஞ்சலி அத்தனாய்.