பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்841


 
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
   தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம்அரோ.
 

சரிதை- கதை; அஞ்சலி அத்தம் - கூப்பிய கை (அத்தம் - கை) ;
பவ்வமிக்க புகழ்  
-  கடல்  போல்  திரண்ட புகழ்; தெய்வ தாசன் -
தெய்வத்தின் தொண்டன் (இங்கு அனுமன்).
  

12.பொத்தகம். படிகமாலை. குண்டிகை.
   பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை
   விமலையை. அமலைதன்னை.
மொய்த்த கொந்து அளக பார
   முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய்
   அணங்கினை. வணங்கல் செய்வாம்.
 

பொத்தகம் -  ஏட்டுச்சுவடி; படிகமாலை - வெண் பளிங்கு மாலை;
குண்டிகை  
- கமண்டலம்; ஞான வித்தகம் - ஞானமுத்திரை; விமலை
-  குற்றமற்றவள்  (கலைமகள்);  கொந்து  - கொத்து; அளக பாரம் -
கூந்தல்;  தவளமேனி  - வெண்மைநிறமான உடம்பு; மைத்தரு -  மை
போன்ற; அணங்கு - தெய்வ மகள்.
  

13.தழை செவி. சிறு கண். தாழ் கைத்
   தந்த சிந்துரமும். தாரை
மழை மதத் தறுகண் சித்ர
   வாரண முகத்து வாழ்பவை.
இழைஇடைக் கலசக் கொங்கை
   இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன். அன்பால்
-
   ‘குறைவு அற நிறைக’ என்றே.
 

தழை    செவி- தழைத்த காது; சிறுகண் - சிறியகண்; தாழ்கை -
நீண்டகை;  தாரை  மழை  மதம்  -  மழைத்தாரையாய்ப்  பொழியும்
மதநீர்; தறுகண் - வலிமை; சித்ரவாரணம் - அழகிய யானை; இழை -
நூல்;  கலசம்  -  குடம்; இமகிரிமடந்தை - இமயமலை யரசன் மகள்;
குழவி  
- குழந்தை (விநாயகன்); தொழுவன் - வணங்குவேன்; குறைவு
அற
- குறைகள் நீங்க; நிறைக - நன்மை நிறைய.
  

14.எக் கணக்கும் இறந்த பெருமையன்.
பொக்கணத்தன். புலி அதள் ஆடையன்.