| முக்கண் அத்தன். வரம் பெற்ற மூப்பனை. அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம். |
எக்கணக்கும் - எந்தக் கணக்கையும்; பொக்கணம் - ஒரு வகைப் பை; புலிஅதள் - புலித் தோல்; முக்கண் அத்தன் - முக்கண் மூர்த்தி (சிவபெருமான்); அப்பன் - தலைவன்; அக்கணத்தின் - அந்தக் கணத்திலே. |
தனியன் |
| 15. | நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற. ஆரணக் கவிதை செய்தான். அறிந்த வான்மீகி என்பான்; சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன். கார் அணி கொடையான். கம்பன். தமிழினால் கவிதை செய்தான். |
நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் - வேதம்; சீர்அணி - சிறப்புடைய; திருவழுந்தூர்- தேரழுந்தூர்; கார்அணி - மேகம் போன்ற; கொடை - ஈகை; கவிதை - செய்யுள். |
| 16. | அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்ன. தானும் தமிழிலே தாலை நாட்டி. கம்ப நாடு உடைய வள்ளல். கவிச் சக்ரவர்த்தி. பார்மேல் நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். |
அம்பு - தண்ணீர் (இங்குப் பாற்கடல்); சிலை - மலை (மந்தர மலை); அமரர் - தேவர்கள்; அமுதம் ஈந்த தம்பிரான் - திருமால்; தால் - நாவு; நரர்க்கு - மானிடர்களுக்கு; ஈந்தான் - தந்தான். |
| 17. | வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற. தாழ்வார் உயர. புலவோர் அகஇருள் தான் அகல |