| போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. |
வாழ்வு ஆர்தரு- நல்வாழ்வு பொருந்திய;அகஇருள் - உள் இருள் (அகம் - மனம்); அகல - நீங்க; போழ்வார் கதிர் - காலத்தில் மிக்குப் பொலியும் பரிதி; சிந்திப்பவர்க்கு - நினைப்பவர்களுக்கு; அரியது - செய்தற்கரியசெயல். |
| 18. | அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல் உம்பரால். முனிவரால். யோகரால். உயர் இம்பரால். பிணிக்க அரும் இராம வேழம் சேர் கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். |
அம்பு- நீர் (கங்கை); அரா - பாம்பு; அணி - அணிந்த; உம்பர் - தேவர்; இம்பர் - இவ்வுலகத்தோர்; பிணிக்க - கட்ட; வேழம் - யானை; கருத்து - உள்ளத்தில்; இருத்துவாம் - இருக்கச் செய்வோம். |
| 19. | சம்பு. அ(ந்)நாள். தன் உமை செவி சாற்று பூங் கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர் பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். |
சம்பு - சிவபிரான்; உமைசெவி - உமாதேவியின் காதுகளில்; பூங்கொம்பு அன்னாள் - மலர்க் கொம்பு போன்றவள் (சீதை) ; கொழுநன் - கணவன்; பாச்செய்த - பாக்களால் செய்த; பம்ப - பொலிய. |
| 20. | இம்பரும் உம்பர்தாமும் ஏத்திய இராம காதை தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே; அம்பரம் தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக் கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. |
இம்பர் - இவ்வுலகத்தோர்; உம்பர் - விண்ணுலகத்தோர்; ஏத்திய - போற்றிய; தம்பம் - பற்றுக்கோடு; ஞானக் கம்பன் - |