ஞானத்தை உடைய கம்பன்; செங்கமலம் - செந்தாமரை; கருத்துற - உள்ளத்தில் பொருந்தி நிற்க; ஆதித்தன் - கம்பனது தந்தையின் பெயர் என்பர். |
| 21. | ஆதவன் புதல்வன். முத்தி அறிவினை அளிக்கும் ஐயன். போதவன் இராம காதை புகன்றருள் புனிதன். மண்மேல் கோது அவம் சற்றும் இல்லான். கொண்டல் மால்தன்னை ஒப்பான். மா தவன் கம்பன் செம் பொன் மலர்அடி தொழுது வாழ்வாம். |
ஐயன் - தலைவன்; அளிக்கும் - கொடுக்கும்; போதவன் - அறிவு மிக்கவன்; புகன்று - கூறி; புனிதன் - தூய்மையாளன்; கோது - குற்றம்; அவம் - வீணான; கொண்டல்மால் - மேகம் போன்ற திருமால்; செம்பொன் - செம்மையானபொன். |
| 22. | ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து. தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு - மூவலூர்ச் சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் கார் ஆர் காகுத்தன் கதை. |
ஆவின் கொடை - ஆக்களைக் கொடையாக அளித்த; திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்- திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த மூவலூர்; குண ஆதித்தன் - நல்ல குணம் உள்ள ஆதித்தன்; சேய் - பிள்ளை; கார்ஆர் - மேகம் போன்று நிறம்; காகுத்தன் - இராமன். |
| 23. | எண்ணி சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல். சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில். கண்ணிய அரங்கர் முன்னே. கவி அரங்கேற்றினானே. |
சகாத்தம் - சாலிவாகன சகாப்தம் (807) ; பங்குனி அத்த நாள் - பங்குனி மாதம் அஸ்தம நட்சத்திரத்தன்று; அரங்கர் முன்னே - திருவரங்கப் பெருமான் முன்பு; அரங்கேறினான் - அரங்கேற்றம் செய்தான். |