பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்845

24.கழுந்தராய் உன கழல் பணியாதவர்
   கதிர்மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ!
   அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன்.
   மறை வேதியருடன் ஆராய்ந்து.
எழுந்த நாயிறு விழுவதன்முன்
   கவி பாடியது எழுநூறே.

 

கழுந்தராய்    - கழுந்து போன்றவராய் (கழுந்து - உலக்கை); உன
கழல்
-  உனது பாதங்களை; வாளி - அம்பு; தொடு - எய்த; சிலை -
வில்;  அபிநவம்  - புதுமை; கவிநாதள் - கவிஞர்தலைவன்; நாயிறு -
சூரியன்.
 

25.கரை செறி காண்டம் ஏழு.
   கதைகள் ஆயிரத்து எண்ணூறு.
பரவுறு சமரம் பத்து.
   படலம் நூற்றிருபத்தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீ
   ராயிரத்து ஒருபத்தாறு;
வரம் மிகு கம்பன் சொன்ன
   வண்ணமும் தொண்ணூற்றாறே.

 

காண்டம்    எழு ;கதைகள் ஆயிரத்து எண்ணூறு;போர்கள் பத்து;
படலம் நூற்று இருபத்தெட்டு; வண்ணம் (சந்தம்)  தொண்ணூற்று   ஆறு;
வரம் மிகு கம்பன் - வரபலம் மிகுந்த கம்பன்.
 
 

26.தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி.

 

தராதலம்- உலகம்;அரம் - இரும்பை ராவும் கருவி; அம்பு நாட்டு
ஆழ்வான்   
-  அம்பை  நாட்டி  ஆழ்த்தியவன்  (இராமன்);   கம்ப
நாட்டாழ்வான்
- கம்பன்.
  

27.இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம்
   எய்தி. அரசு ஆண்டு இருந்தாலும்.