பக்கம் எண் :

846பால காண்டம்  


 

உம்பர் நாட்டில் கற்பகக் கா
   ஓங்கும் நீழல் இருந்தாலும்.
செம்பொன்மேரு அனைய புயத்
   திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில்போல்.
   கற்றோர்க்கு இதயம் களியாதே.
 

இம்பர் நாட்டின் - இவ்வுலகத்தின்; எய்தி- அடைந்து; அரசாண்டு
- ஆட்சி செய்து; உம்பர் நாட்டின் - விண்ணுலகத்தின்; கற்பகக் கா -
கற்பகச்  சோலை;  நீழல்  -  நிழல்;  மேரு  அனைய - மேரு மலை
போன்ற; புயம் - தோள்; திறல் - வலிமை; கவிதை - பாடல்; இதயம்
- மனம்; களியாது - மகிழாது.
  

28.நாரதன் கருப்பஞ் சாறாய்.
   நல்ல வான்மீகன் பாகாய்.
சீர் அணி போதன் வட்டாய்.
   செய்தனன்; காளிதாசன்.
பார் அமுது அருந்தப் பஞ்ச
-
   தாரையாய்ச் செய்தான்; கம்பன்.
வாரம் ஆம் இராமகாதை
   வளம் முறை திருத்தினானே.
 

கருப்பஞ்சாறு   - கரும்புச் சாறு; பாகு - சக்கரைப் பாகு; வட்டு -
வெல்லக்கட்டி; பஞ்சதாரை  -  சர்க்கரை;  பார்  அமுது  அருந்த -
உலகம் அமுதாக உண்ண; வாரம் - அன்பு.
  

29.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்.

 

நல்கும்- வழங்கும்; தின்மை - தீமை; தேயும் - தேய்ந்து போகும்;
சென்மம்
- பிறப்பு;மரணம் - இறப்பு; இன்றி - இல்லாது; இம்மையே -
இவ்வுலகிலேயே;
  

30.ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே.
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே
-
‘இராம’ என்று ஒரு மொழி இயம்பும்காலையே.