பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்847

மகம்- வேள்வி;உய்க்கும் - சேர்க்கும்; நராதிபர் - அரசர்; விராய்
-  கலந்து;  எணும்  - எண்ணும்; பவம் - பிறப்பு; இயம்பும் காலை -
சொல்லும் போது; வேர் அறுக்கும் - வேருடன் அழிக்கும்.
  

31.மற்று ஒரு தவமும் வேண்டா;
   மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல்
   தெளிந்து. அதில் ஒன்றுதன்னைக்
கற்றவர். கேட்போர். நெஞ்சில்
   கருதுவோர். இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும்
   உம்பராய் வீட்டில் சேர்வார்.
 

மணி மதில் -அழகிய மதில்; மூதூர் - பழமையான ஊர்; விசயம் -
வெற்றி; செற்றவன் - வென்றவன்; உம்பராய் - தேவராய்;  வீட்டில் -
பேரின்ப வீட்டில்.
  

32.வென்றி சேர் இலங்கையானை
   வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில்
   நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும்.
   உரைத்திடக் கேட்டோர் தாமும்.
‘நன்று இது’ என்றோர் தாமும்.
   நரகம்அது எய்திடாரே.
 

வென்றி- வெற்றி; இலங்கையான் - இராவணன்; மால் - திருமால்;
ஓத
- கூற; நின்ற - நிலைபெற்ற; நிகழ்ந்திடு- நடைபெறுகின்ற; நரகம்
அது எய்திடார்
- நரகத்தை அடைய மாட்டார்கள்.
  

33.இறு வரம்பில் ‘இராம’ என்றோர். உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்.
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ?

 

இறுவரம்பு  -  இறுதிக்காலம்  (உயிர் விடும்  போது);  உம்பர் -
சுவர்க்கம்;  நிறுவர் - நிலைப்பர்; மறு இல் - குற்றமில்லாத; மாக்கதை
- சிறந்த கதை; பெறுவர் - அடைவர்; பேசவும் - சொல்லவும்.