| 38. | இராகவன் கதையில். ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர். பராவ அரும் மலரோன் உலகினி. அவனும் பல் முறை வழுத்த. வீற்றிருந்து. புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள் அதனினும். பொன்றா அரா-அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. |
இராகவன் - இராமன்; ஏக பாதம் - ஒரு வரி; பராவரும் - பரவுதற்கு அரிய; மலரோன் - பிரமன்; வழுத்த - துதிக்க; புராதன - பழமையான; அண்டர் பொன்பதம் - தேவருலகம்; பொன்றும் - அழியும்; அரா அணை - பாம்புப் படுக்கை; அமலன் - திருமால். |
| 39. | இனைய நல் காதை முற்றும் எழுதினோர். வியந்தோர். கற்றோர். அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர். கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசுஆய் வாழ்ந்து. வினையம் அது அறுத்து. மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். |
இனைய - இத்தகைய; காதை - கதை; முற்றும் - முழுவதும்; அரும்பொருள் - அரிய செல்வம்; கனைகடல் - ஒலிக்கும் கடல்; புடவி மீது - உலகத்தின் மேல்; காவலர் - மன்னர்; வினையம் - தீவினை; விண்ணவர் பதம் - பேரின்ப வீடு. |
| 40. | நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்; வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;- நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய. வாகை சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. |
நாடிய - விரும்பிய; ஞானம் - மெய்யறிவு; வீடு - பேரின்ப வீடு; வேரி - மணம்; கமலை - மலர்மகள்; நீடிய - நீண்ட; நீறு - புழுதி; வாகை - வெற்றிமாலை; சிலை - வில். |