| 41. | வான் வளம் சுரக்க! நீதி மனு நெறிமுறை எந் நாளும் தான் வளர்ந்திடுக! நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க! தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க. எங்கும்! |
வான் - வானம் (மழை); கிளை - சுற்றம்; அறாத - நீங்காத; தெசரத ராமன் - தசரத ராமன் (மோனை கருதி ‘தெச’ என்றார்); இடை அறாது - இடைவிடாமல்; ஒளிர்க - விளங்குக. |
பாயிரம் |
| 42. | எறிகடல் உலகம்தன்னுள் இன்தமிழ்ப் புலவர்க்கு எல்லாம் முறுவலுக்கு உரியதாக மொழிந்தனென்; மொழிந்த என்சொல் சிறுமையும். சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால். அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. |
எறிகடல் - ஒலிக்கும் கடல்; இன்றமிழ் - இனிய தமிழ்; முறுவல் - புன்சிரிப்பு; மொழிந்த - கூறிய; சிறுமை - தாழ்வு; செறிந்த - சேர்ந்த; அமிழ்தம் - அமுதம்; ஒத்து - போல. 9-1 |
2 நாட்டுப் படலம் |
| 43. | காளையர் சேறுதன்னைக் கலந்து. உடன் மிதித்து. நட்ட தாள்களும் கழுநீர் நாறும்; தடக் கையும் அதுவே நாறும்; ஆளையும் சீறிப் பீறி. அணி மலர்க் கமுகில் பாய்ந்த வாளையும். பாளை நாறும்; வயல்களும் அதுவே நாறும். |
காளையர் - காளை போன்றவர் (மழவர்); கழுநீர் - செங்கழு நீர் மலர்; தடம் கை - பெரிய கை; அணிமலர் கமுகு - அழகிய மலரை உடைய கமுகு. 14-1 |