உழவர்கள் சேற்றை மிதிக்க அங்கு மலர்ந்துள்ள செங்கழுநீர் மலரின் மணத்தால் தாள்களும் கைகளும் அந்த மலர்மணமே கமழும். வாளைமீன்கள் கமுகில் பாய்வதால் அந்த வாளை மீன்களும் வயல்களும் கமுகம் பாலை மணம்கமழும். |
3 நகரப் படலம் |
| 44. | எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி. எவ் உயிரும் மங்கும் பிறவித் துயர் அற. மாற்று நேசம் தங்கும் தருமத்து உரு ஆகி. தரணி மீது பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம்? |
பொலியும்- விளங்கும்; பரஞ்சுடர் - மேலான ஒளி; தரணி - உலகம்; புத்தேள் - இறைவன்; தருமத்து உரு - அறத்தின் வடிவம். 74-1 |
| 45. | வேதம்அதனுள் விளை பொருள் விகற்பத்துள் அடங்காச் சோதி மயமாய்த் துலங்கி. தொல்உயிர்த் தொகை பலவாய். ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே. பூக்கும் ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம். |
விளைபொருள்- விளைந்த பொருள்; விகற்பம் - வேறுபாடு;தொல் உயிர் - பழைமையான உயிர்; புவனம் - உலகம்; உதரம் - வயிறு; ஆதி முதல்வன் - ஆதியாகிய முதல் பொருள்; அமர் - அமர்ந்திருக்கும். 74-2 |
4 அரசியற் படலம் |
| 46. | விரி கதிர் பரப்பி. மெய்ப் புவனம் மீது இருள் பருகுறும் பரிதி அம் குலத்தில். பார்த்திவன் இரகு. மற்று அவன் மகன் அயன் என்பான். அவன் பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. |
விரிகதிர் - விரிந்த கிரணங்கள்; பருகுறும் - உண்ணுகின்ற; பார்த்திபன் - அரசன்; பெருகு - பெருகிய; தோன்றல் - மகன் (தயரதன்). |