| 51. | ‘காத்தி நீ எமை; காக்கிலர் தம்மை யாம் ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப் பார்த்தியோ? - திருப் பாற்கடற் பள்ளியின் மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்! |
காத்தி- காப்பாயாக; காக்கிலர் - காக்க இயலாதவர்கள்; இடர் - துன்பம்; ஏத்தி - துதித்து; முகில் - மேகம்; மேனி - உடல். 8-2 |
| 52. | ‘அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால். நொந்துளோம்! இறைவா! நொடிப் போதினில் வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்- எந்தையே! கருணாகரனே!’ எனா. |
அந்தகாரம் - பேரிருட்டு; செய்தீமை - செய்த தீமை (வினைத் தொகை) ; நொடிப் போதினில் - ஒரு நொடிப் பொழுதில் (விரைவாக) எனா - என்று. 8-3 |
| 53. | அறி துயில் எழுந்தனன். அமரர் கூப்பிடும் மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே; நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை. இறைவனும். திரு உளத்து அறிந்து. அங்கு எய்தவே. |
அறிதுயில்-யோக நித்திரை; அமரர் - தேவர்கள்; மறை - வேதம்; இசைக்க - கேட்க; இறைவன் - திருமால்; எய்த - அடைய. 15-1 |
| 54. | வானவர் அம் முறை வழங்க. மா மதித் தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான் ஆனவர்தமைக் கரம் அமைத்து. அங்கு. ஐயனைத் தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான். |
வானவர் - தேவர்கள்; இதழி - கொன்றை; தெரியல் - மாலை; வேணி - சடைமுடி; சாற்றல் மேயினான் - சொல்லத் தொடங்கினான். 9-1 |
| 55. | எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை- தனைச் சொல. தரணிபர்க்கு அரசன்தான் மகிழ்ந்து. அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய. தம் மனத் துயர் அகன்றிட. வணங்கிக் கூறுவான். |
கலை மாமுகம் - மான்முகம்; தரணிபர் - அரசர்; உய்ய - வாழ. 78-1 |