பக்கம் எண் :

854பால காண்டம்  

56.மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே.

 

ஓடை   - நெற்றிப் பட்டம்; களிறு அனான் - யானை போன்றவன்
(இராமன்);  உதயம்  -  இலக்கினம்  (கடகம்); மதி மேடம் -  திங்கள்
சித்திரை;  மீன் - நட்சத்திரம்; கழை - புனர் பூசம்; மால் - புதன்;  ஐ
-  பத்தாமிடம்;  கோள்  -  கிரகங்கள்;  நால்வர்  - செவ்வாய். குரு.
சுக்கிரன்.    சனி.    ஜென்ம    இலக்கினத்திலிருந்து    பதினொன்று.
பதினொன்றுக்குரியவர் நால்வரும்  தங்களது உச்ச  வீடுகளான  நான்கில்
இருந்தனர் என்பது கருத்து.                             106-1
 

57.என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில். தாம் தெரிந்து.
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்
-
வன் திறல் சுரர்குரு வாழ்த்து எடுப்பவே.

 

ஈசன்  - இறைவனாகிய இராமன்; தகும் முறை - தகுந்த முறையில்;
தமனியம்  
-   பொன்;   ஓதினார்   -  படித்தார்கள்;  சுரர்குரு  -
வியாழன்.                                          106-2
 

58.நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி. ‘ஐய! என்
பாக்கியம் பலித்தது. இப் பாலர்’ என்று. பார்
காக்குறும் அரசனும். கழறல் மேயினான்.
 

நோக்கினன் - பார்த்தான்;  பாக்கியம்  -  பேறு;  பார்காக்குறும்
அரசன்
- தயரதன்; கழறல் - கூறல்.                      107-1
 

59.சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.

 

சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் - பரிமளப் பொடி;
தையலார்  
- பணிப்  பெண்கள்;  பந்தியில்  - வரிசையில்; சிவிறி -
விசிறி; இந்திரவில் - வானவில்; பார்மிசை - தரை மேல்.       115-1
 

60.அரு மறை நெறி வழி. அரசனும். அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி.