| கரை அறு திரு நகர் விழவொடு களியா. இருமையும் உதவுறு தானமும் ஈந்தான். |
அன்னப் பிரசனம் - முதன் முதல் குழந்தைக்கு உணவூட்டுதலாகும்; கரை அறு - அளவற்ற; களியா - களிப்படைய; இருமை - இம்மை. மறுமை. 120-1 |
6 கையடைப் படலம் |
| 61. | அப் பெருந் திருவொடும் ‘அகில நாதன்’ என்று. எப் பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே. தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே. ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். |
பெருந்திரு - பெருஞ் செல்வம்; அகில நாதன் - அகிலத்துக்குத் தலைவன்; புவனம் - உலகம்; தப்ப அரும் - தப்ப அரிய; தயா - கருணை; ஒப்புரவு - பரோபகாரம்; உவந்து - மகிழ்ந்து. 1-1 |
| 62. | அரி - அணைமிசைதனில். அழகு மன்றினில். புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள் அரசர்கள் முடி படி அணைய. அம் பொனின் உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. |
அரியணை - சிம்மாசனம்; மன்று - மன்றம் (அரசவை) ; நீடு - நீண்ட; படி அணைய - நிலத்தில் பட; பொனின் - பொன்னின்; உரை - உரையும். 1-2 |
| 63. | ‘“இனைய சோலை மற்று யாவது?” என்று. மா முனிவ! கூறு’ என முதல்வன் கூறலும். பனுவல் வேத நூல் பகரும் மா தவன். ‘தனு வலாய்! இதன் தன்மை கேள்’ எனா. |
இனைய- இத்தகைய; முதல்வன் - இராமபிரான்; பனுவல் - நூல்; பகரும் - சொல்லும்; தனுவல்லாய் - விற்போரில் வல்லவனே. 24-1 |
| 64. | ‘சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன் உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள். வெம்பி. மற்று அவன் வெற்றி கொண்ட போது. அம்பரம் இழந்து. அவனி வந்தனன்; |
தானவன் - அரக்கன்; உம்பர் கோமகன் - தேவர்களுக்கு அரசன்; அமர் - போர்; உடன்று - புரிந்து; அம்பரம்-விண்ணுலகம். 24-2 |