| 65. | ‘அவனி வந்து. மன்னவர் இடம்தொறும். தவனன் என்னவே தான் உழன்று. அறிந்து. “இவனில் வேறு மற்று இல்லை எற்கு” எனா. உவன் விரும்பி வந்து. உந்தை நாடு உறா. |
அவனி - மண்ணுலம்; தவனன் - சூரியன்; உழன்று - திரிந்து; இவனில் - இவனை விட; எற்கு - எனக்கு; உந்தை - உனது தந்தை (தயரதன்); எனா - என்று; உறா - உற்று; இரண்டும் செயா என்ற வாய்ப்பாட்டு வினை எச்சங்களாகும். 24-3 |
| 66. | ‘இந்த இவ் இடத்து எய்தி. இந்திரன். “சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் வந்து நிற்க” எனா. மன நினைப்பின்முன். முந்து வந்து மா முரல நின்றவால். |
எய்தி - அடைந்து; சந்த - அழகிய; வார் - நீண்ட; தரு - மரம் (கற்பகம் முதலிய ஐந்து); நினைப்பின் முன் - நினைக்கும் முன்; மாமுரல - வண்டுகள் ரீங்கரிக்க. 24-4 |
| 67. | ‘நின்ற சோலைவாய். நியமம் நித்தமும் குன்றல் இன்றியே செய்து கொண்டு. அவன் நன்றியால் இருந்து. அரசை நண்ணியே. துன்று சோலையின் தொழில் உணர்த்தினான். |
சோலைவாய்- சோலையிடம்; குன்றல் - குறைதல்;அரசை நண்ணி - அரசை விரும்பி; துன்று சோலை - நெருங்கிய சோலை. 24-5 |
| 68. | ‘உருவம் மாறி. வேறு உருமாகியே. நிருப! நின் குடை நிழலின் நிற்றலும். பரிவின் நோக்கி. “நீ பகர்தியால்” எனத் தருவின் நாயகன்தான் விளம்பினான்; |
உருவம் மாறி - வேறு வடிவம் கொண்டு; நிருப - அரச; பரிவு - அன்பு; பகர்தியால் - கூறுக; தருவின் நாயகன் - கற்பக மரத்தின் தலைவன். 24-6 |
| 69. | ‘“சதமகன்தனைச் சம்பரன் எனும் மத மகன் துரந்து அரசு வவ்வினான்; கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன் விதம் அகன்று வந்து. உன்னை மேவினேன்.” |