பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்857

சதமகன்   -    இந்திரன்;   மதுமகன் - மதம் கொண்ட அரக்கன்
(சம்பரன்);  துரந்து  -  வென்று;  கதம்  -  கோபம்;  மேவினேன் -
அடைந்தேன்.                                        24-7
 

70.‘என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று. மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று. வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து. மீண்டு அயோத்தி மேவினான்.

 

என்றபோது     - எனக் கூறிய போது; உக - அழிய; வாசவன் -
இந்திரன்; கொள்ள  -  அடைய;  அளித்து  -  ஈந்து; மேவினான் -
சேர்ந்தான்.                                          24-8
 

71.‘அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம். இச் சோலை’ என்றலும்.
மன்னர்மன்னவன் மதலை. ‘நன்று’ எனா.
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.

 

அவனி   -   பூமி; கா - சோலை; இன்ன நாமம் - இந்தப் பெயர்;
மன்னவர்  மன்னவன்  
-  தயரதன்;  மதலை  -  மகன்; பின்னை -
பிறகு.                                              24-9
 

                                7 தாடகை வதைப் படலம்
 

72.‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:

 

கல்நவில்    தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் -
பிரமன்;  வாய் மடுத்து - வாயில் பெய்து; கூற்றம் - எமன்; அறைய -
கூற.                                               20-1
 

73.‘இயக்கர்தம் குலத்துளான்.
   உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
   எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
   வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
   உளன் ஒர் தூய்மையான்.