இயக்கர் - கந்தருவர்; மொய்ம்பு - வலிமை; வியக்குறும் - வியப்படையும்; வெம்மை - வெப்பம்; துயக்கு - குற்றம் (சற்சரன் மகன் சுகேதுவாம்). 20-2 |
| 74. | ‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான். மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும் நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம் பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான். |
அன்னவன்- அந்த சுகேது; மகவு - குழந்தை; இலாது - இல்லாது; வைகுறும் - தங்கும்; முதல்வன் - பிரமன்; வழுத்தி - வணங்கி; பல்நெடும் பகல் - பல நாட்கள்; பயின்ற - செய்த; பான்மை - தன்மை. 20-3 |
| 75. | ‘முந்தினன் அரு மறைக் கிழவன். “முற்றும் நின் சிந்தனை என்?” என. “சிறுவர் இன்மையால் நொந்தனென்; அருள்க” என. “நுணங்கு கேள்வியாய்! மைந்தர்கள் இல்லை; ஒரு மகள் உண்டாம்” என்றாள். |
முந்தினன் - முன் வந்தான்; அருமறை - அரிய மறை; கிழவன் - தலைவன்; சிந்தனை - எண்ணம்; நுணங்கு கேள்வி - நுட்பமான கேள்வியறிவு. 20-4 |
| 76. | “பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும். ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத் தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ போ” என. மலர் அயன் புகன்று போயினான். |
பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் - ஒக்கும்; பொற்பு - அழகு; மதமலை - மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு - ஆயிரம்; வலி - வலிமை; தனயை - மகள்; மலர் அயன் - பிரமன். 20-5 |
| 77. | ‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச் சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான். |