ஆயவன் - அந்த பிரமன்; அலர்ந்த - மலர்ந்த; சேயவள் - திருமகள்; செவ்வி - தன்மை; இவட்கு ஆயவன் - இவளுக்கு உரிய கணவன்; நாயகன் - தலைவன்; என்பவற்கு - என்பவனுக்கு; நல்கினான் - தந்தான். 20-6 |
| 78. | ‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய். தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார். |
காமன் - மன்மதன்; இயக்கன் - சுந்தன்; அணங்கு - தெய்வ மகள்;அனாளும் - அன்னாளும்; யாமம் - இரவு; ஈறு - முடிவு; சலதி - கடல்; பெருங்களி - பெரும் களிப்பு; தாம் உறு - தாம் உற்ற. 20.7 |
| 79. | ‘பற்பல நாள் செலீஇ. பதுமை போலிய பொற்பினாள் வயிற்றிடை. புவனம் ஏங்கிட. வெற்பு அன புயத்து மாரீசனும். விறல் மல் பொரு சுவாகுவும். வந்து தோன்றினார். |
செலீஇ- சென்று; பதுமை - பாவை;போலிய - போன்ற; புவனம் - உலகம்; வெற்பு - மலை; விறல் - வலிமை. 20-8 |
| 80. | ‘மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும். தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது. ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக் காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான். |
வரம்பு- எல்லை; இல் - இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது; வளர்வுழி - வளரும் போது; இயக்கன் - கந்தர்வனாகிய சுந்தன். 20-9 |
| 81. | தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர. மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள் பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். |
தீது உறும்- தீங்குடைய; அவுணர் - அரக்கர்; தீமை தீர்தர - தீங்கு தீர; எலாம் - எல்லாம்;மாதவன் - அகத்தியன்; நீள் பாதவம் - பெரிய மரம் (மலையுமாம்.) 20-10 |