| 82. | ‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன் தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான். |
விழைவு - விருப்பம்; உழை - பசு (மானுமாம்); கலை - கலைமான்; இரலை - புல்வாய்; வழை - சுரபுன்னை; மரன் - மரம்; மடிப்ப - அழிக்க; தழல் - நெருப்பு; என - என்னும்படி; விழித்தனன் - விழித்தான். 20-11 |
| 83. | ‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும் பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா. ‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா. நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். |
விளிந்தமை - இறந்ததனை; பொற்றொடி - பொன் வளையல் அணிந்த தாடகை; கனல் - தீ; பொங்குறா - பொங்கி; முற்றுற - அடியோடு (முழுதும்); எழா - எழுந்து; நற்றவன் - அகத்தியன்; நண்ணினான் - அடைந்தான். 20-12 |
| 84. | ‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட. கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும் வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே. |
வளி - காற்று; அடங்கலும் - எல்லாமும்; கடிகெட - மகிழ்ச்சி நீங்க; கதிர் - சூரியன்; தடி உடை - மின்னலை உடைய; மண்ட - நெருங்க. 20-13 |
| 85. | ‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன் உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து “அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே. |
அளப்ப அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் - தந்த அகத்தியன்; கனல் உமிழ் - நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து - ஊங்காரம் செய்து; இழிக - இழிந்தவர்களாகுக; அசனி - இடி. 20-14 |
| 86. | ‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும் முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம் |