பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்861

அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.

 

வெருக்கொள    - அஞ்ச; முருக்கி - அழித்து; உழலும் - திரியும்;
உருக்கிய செம்பு  
- உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் - உமிழ்கின்ற
கண்.                                                   20-15
   

87.‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்.
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர்.

 
 

வெகுளி- சினம்; அறைந்த - கூறிய; தருக்கு - வலிமை; நேர்ந்து
- அடைந்து; நிற்கு - உனக்கு; கூர்ந்தனர் - அணுகினர்.        20-16
   

88.‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ.
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள்.

 
 

அநேக     நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் - தவம்;
தசமுகன்  
-  இராவணன்; மாதுலர் - மாமன்மார்; பவனன் - சூரியன்;
திரிகுநர்
- திரிபவர்கள்; பதகி - பாதகி (தாடகை).             20-17
 

89.‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள். - அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.

 

மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா - நீங்காத; சலம் - சினம்;
வகுந்துவின்  
-  வழிவழியாக;  வசுவரி  -  வசுக்களின்  தலைவனான
இந்திரனது குற்றக் குறி; வதிந்தது - தங்கியது; அழல் - நெருப்பு. 20-18
   

90.‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.