மன்னர் மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று - இன்னும் ஒன்று; உரைக்கின்றது - சொல்லுவது; ஓதல் - கூறுதல்; ஈறுஇலான் - முடிவில்லாதவன். 39-1 |
| 91. | ‘பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு உருகு காதலுற. உறவாதலே கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான். |
பிருகு- பிருகு முனிவன்; கயல்கண் - கயல் போன்ற கண்; வல் ஆசுரர்க்கு - வலிய அசுரர்களுக்கு; உறவாதல் - உறவு உடையவதனால்; கருதி - எண்ணி; ஆவி - உயிர்; நேமியான் - ஆழிப்படையுடைய திருமால். 39-2 |
| 92. | “வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர் போனகம் தனக்கு” என்று எணும் புந்திய தானவள் குமுதிப் பெயராள்தனை ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன். |
போனகம்- உணவு; எணும் - எண்ணும்; புந்தி - மனம்; ஊன் ஒழித்தல் - கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் - இந்திரன். 39-3 |
| 93. | ‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு. ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்- தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’ |
அரி- திருமால்; ஆகண்டலன் - இந்திரன்; கீர்த்தி - புகழ்; ஏதம் - குற்றம்; சொலாய் - சொல்லாய்; தாது - மகரந்தம்; அடர்ந்து - செறிந்து; தயங்கிய - விளங்கிய; தார் - மாலை. 39-4 |
| 94. | ஏக்கமோடும் இமையவர் எங்கணும். வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள். மூக்கும் வார் செவியும் முறை போயிட. தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான். |
வாக்கின்- பேச்சுக்கு; முந்துற - முன்னம்; மாயை - மாயைச் செயல்; போயிட - போக; இளவல் - இலக்குவன். 48-1 |
| 95. | விலக்கி நின்று. அவன் வெங் கணை விரைவினில் விலக்கி. |