| 96. | கலக்கம் வானவர் தவிர்ந்திட. காலனும் கலங்கத் துலக்கி. வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும் உலக்க. ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான். |
வெங்கணை - கொடிய அம்பு; காலன் - எமன்; இடுக்கண் - துன்பம்; உலக்க - நீங்க; ஊழித்தீ - ஊழிக்காலத்துத் தீ; ஒப்பது - ஒத்தது. 48-2 8 வேள்விப் படலம் |
| 96. | ‘குசன். குசநாபன். கோது இல் குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து இசை கெழு வசு. என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள் தம்முள் குசன் கவுசாம்பி. நாபன் குளிர் மகோதயம். ஆதூர்த்தன் வசை இல் தன்மவனம். மற்றை வசு கிரிவிரசம். வாழ்ந்தார். |
கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு - புகழ் விளங்கும்; ஓதும் - கூறும்; குளிர் - குளிர்ந்த; வசை இல் - குற்றமில்லாத. 4-1 |
| 97. | குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால். செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான். |
குறியவன்- வாமனன்; குண்டிகை - கமண்டலம்; மறிபட - தடுத்து நிற்க; செறிவது - செறிந்து நிற்பது; உடைந்து - கெட்டு; உறுதுயர் - மிக்க துயர். 23-1 |
| 98. | நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்; நாட்டம்அது அகத்துளான். சிலம்பின் நாமத்தான். ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ. வாட்டம் இல் அந்தணன் மலர்க்கை நீட்டினான். |
வேலை - சமயம்; சிலம்பின் நாமத்தன் - வெள்ளி; அந்தணர் - வாமனன்; வாட்டம் இல் - வாட்டமில்லாத; மலர்க் கை - மலர் போன்ற கை. 23-2 |