பக்கம் எண் :

866பால காண்டம்  

தேவர்களின்     தலைவியான    திருமகளின்  பூமாலையைத் தான்
பெறுவதற்கு  என்ன  மாதவம் செய்தேன் என    மகிழ்ந்து அதைத்தன்
முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது.       3-5
   

104.‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
   பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
   மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
   முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
   களிற்றின்மேல் விளங்க.

 
 

யானைக்கு     மலை  உவமை   -  வலிமை.  பெருமை.  மதநீர்
அருவியுடைமை   பற்றி;   ஐராவதம்  -  இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.

இந்திரன்     ஐராவத  யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல்.  ஐராவதத்தின்   மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு.                3-6
   

105.‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
   உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
   நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
   குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
   வீதிகள் நெருங்க.
 
 

அரம்பை     - நளகூபரனின் போகமடைந்தை;  திலோத்தமை -
பிரமனால்   படைக்கப்பட்டவள்;  ஊர்வசி  -  நாராயண  முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.

அரம்பை  முதலான   தேவதாசிகள்   நால்வரும்  பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது.             3-7
   

106.‘நீல மால் வரை தவழ்தரு
   கதிர் நிலாக் கற்றை
போலவே. இரு புடையினும்.
   சாமரை புரள.