பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 107

     புதல்வனுக்கு; இரைத்த வேலை சூழ் உலகம் - ஒலிக்கும் கடல்
சூழ்ந்த உலகத்தை; ஈந்தாய் - கொடுத்தாய்; (ஆதலால்) இனி நீ தரைக்கு
நாயகன் தாய்’-
இனிமேல்நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய்;’
என - என்று;  தணியா - தாழ்ந்துபாராட்டி; (தொடரும்).

     ‘பரதனுக்கு நான் பெற்ற தாய்; இன்று அரசை அவனுக்குப் பெற்றுத்
தந்ததால் பரத அரசனுக்குநீயே தாய்’ என்று கூனியைப் பாராட்டினாள்.
தழுவி,  நீட்டி தணியா என்ற வினையெச்சங்கள் அடுத்தபாட்டில் முடியும்.
தணிதல் - தாழ்தல். ‘தணியா’ என்பது ‘செய்யா’ என்னும் வாய்பாட்டில் வந்த
வினையெச்சம். அது உடன்பாட்டுப் பொருளது. தணிந்து - தாழ்ந்து என்றாம்.
தன்னைத் தாழ்த்திக்கொண்டு தயால்லள் என்று சொல்லி,  அவளைத் தாய்
என்று உயர்த்திப் பாராட்டினாளாம்.                                91

கைகேயியின் உறுதிமொழி  

1490.‘நன்று சொல்லினை; நம்பியை
     நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல்
     இவ் இரண்டும்
அன்றது ஆம் எனில், அரசன் முன்
     ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்;
     போதி நீ ’ என்றாள்.

     ‘(நீ) நன்று சொல்லினை - நீ நல்ல உபாயம் சொன்னாய்; நம்பியை
நளிர்முடிசூட்டல் -
பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்;
இராமனைத் துன்று கானத்தில் துரத்தல்- இராமனை நெருங்கிய காட்டில்
ஓட்டுதலும்; இவ் இரண்டும் - இந்த இரண்டும்;  அன்றது ஆம் எனில் -
அல்லாமல் போமாயின்;  அரசன் முன் - சக்கரவர்த்தியாகியதயரதன்
எதிரில்;  யான் ஆர் உயிர் துறந்து - நான் என்னுடைய பெறுதற்கரிய
உயிரை விட்டு; பொன்றி - இறந்து; நீங்குதல் - இவ்வுலகை விட்டு
நீங்குதலை;  புரிவென் -செய்வேன்;  நீ போதி - நீ போவாயாக;’ 
என்றாள் - என்று சொநீன்னாள்.

     இவ்வாறு கைகேயி உரைத்தபடியால் இனி இவள் சிறிதும் மாறமாட்டாள்
என்ற உறுதி மந்தரைக்குஉண்டாயிற்று.  இவ் வாக்குறுதியைப் பெறவே ‘என்
உரை தலை நிற்பின்’ என்று (1486) முன்னர்க்கூனி கூறினாளாம். ‘இரண்டு
வரங்களையும்  பெறுவேன்; நாயகன் தராவிடின் நான் நமனுலகம் புகுவேன்’
என்று உறுதி உரைத்தாள் கைகேயி. இனியும் கூனி தாமதிப்பின்
அவளால்தான் நிகழ்ந்தது என்றுஐயுறும் ஆதலின் அவளை ‘நீ போதி’
என்ற அப்புறப்படுத்தினாள். ‘தணியா’ என்ற முன்பாட்டின் வினையெச்சம்
‘என்றாள்’  என இங்கே முடிந்தது.                                92