பக்கம் எண் :

மந்திரப் படலம் 11

“உன்னிய - என்னால் நினைக்கப்பட்ட ;  பெறல் அரும்உறுதி ஒன்று
உளது
- பெறுதற்கு அரிய உறுதிப் பொருள் ஒன்று உள்ளது ; என்
உணர்வுஅனைய நீர்
- (அதனை) என் உணர்வை ஒத்த நீவிர் ;  இனிது
கேட்டிரால்
-நன்றாகக் கேட்பீர்களாக” என்றான்.

    உறுதி - ஈண்டு உறுதியைப் பயக்கும் பொருளைக் குறித்தது.
அஃதாவதுஇராமனுக்கு முடிசூட்டித் தான் வீடுபேறு அடைதற்குரிய நெறியில்
செல்லத் தயரதன் நினைத்ததைக்குறித்தது. யான் உணர்தற்குரியதை நீங்கள்
உணர்ந்து கூறும் தன்மையுடையீர் என்னும் கருத்தினால்‘என் உணர்வு
அனைய நீர்’ என்றான்.                                         12

1326. ‘வெய்யவன் குல முதல் வேந்தர், மேலவர்,
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே,
வையம் என் புயத்திடை, நுங்கள் மாட்சியால்,
ஐ-இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்.

     வெய்யவன் குலம் முதல் வேந்தர் - சூரிய குலத்தில் தோன்றிய
முதன்மையான அரசர்களாகிய ;  மேலவர் - முன்னோர்களின் ;
செய்கையின் - ஒழுக்கத்திலிருந்து ;  ஒருமுறை திறம்பல் இன்றியே -
ஒருசிறிதும் வழுவுதல் இல்லாமல் ;  வையம் - உலகத்தை ;  ஐ-இரண்டு
ஆயிரத்து ஆறு
- அறுபதினாயிரம் ஆண்டுகள் ; நுங்கள் மாட்சியால் -
உங்களதுநற்குண நற்செயல்களாகிய பேருதவியால் ; என் புயத்திடைத்
தாங்கினேன்
- என்தோள்களில் சுமந்தேன்.

     செய்கை - ஒழுக்கம். முறையும் என்னும் இழிவு சிறப்பும்மை
விகாரத்தால்தொக்கது. அரசாட்சி பாரம் ஆதலின் தோள்களில்
தாங்குவதாகக் கூறப்பட்டது.                                     13

1327. ‘கன்னியர்க்கு அமைவரும் கற்பின், மா நிலம்-
தன்னை இத் தகைதரத் தருமம் கைதர,
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் ; 
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்.

     ‘கன்னியர்க்கு - பெண்களுக்கு ;  அமைவரும் - பொருந்தும் ;
கற்பின் - கற்பினை அவர்கள் காப்பது போல ;  மாநிலம் தன்னை -
பெரிய உலகத்தை ;  இத் கைதர  - அறக்கடவுள்உதவியதனால் ;  மன்
உயிர்க்கு
- நிலைபெற்ற உயிர்களுக்கு ; உறுவதேசெய்து வைகினேன் -
பொருந்தும் நன்மைகளையே இந்நாள்வரை செய்து வாழ்ந்தேன் ;  என்
உயிர்க்கு உறுவதும்
- இனி, என் உயிர்க்குப் பொருந்தும் நன்மையையும்;
செய்ய எண்ணினேன் - புரிவதற்கு நினைந்தேன்.’

     கன்னியர் - பெண்டிர் என்னும் பொருளில் வந்தது. கைப்பிடித்தான்
ஒருவனுக்கே உரியராய் இருத்தல் பெண்டிர்க்குக் கற்புடைமை ஆகும்.
அதுபோல