1494. | நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன, ‘கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. |
கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து என - மான் விழுந்தாற் போலவும்; நாடகம் மயில் துயின்று என்ன - ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வை கூர்தர - துன்பம் மிக; சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை - மணங்கமலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும் என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’ என்று கருதி; அயோத்தி வந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த; அம் மடந்தை தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவி என்னுமாறு; கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள். ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது. திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம். அவ்வை - தாய்; தவ்வை - தமக்கை. 4 தயரதன் கைகேயியின் மாளிகைக்கு வருதல் 1495. | நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை, யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில், ‘வாழிய’ என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் - ஆழி நெடுங் கை மடங்கள் ஆளி அன்னான். |
ஆழி நெடுங் கை - ஆணைச் சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளை யுடைய; ஆளி மடங்கள்அன்னான் - சிங்க ஏறு போன்றவனான தயதன்; கங்குலின் நாழிகை நள் அடைந்த பின்றை -இராப்பொழுது நடுவை அடைந்த பின்னர்; வாழிய என்று அயில் மன்னர் துன்ன - ‘வாழ்க’ என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர; யாழ் இசை அஞ்சிய அம்சொல்ஏழை கோயில் - யாழினது |