பக்கம் எண் :

158அயோத்தியா காண்டம்

முத்த மூரல் முறுவலார்-பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப்
போன்ற பற்களையும் புன்னகையையும் உடையபெண்களுடைய; அணியின்
சோதி -
ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்;  வளைக்கலாம்என்று -
தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ் வானோர்
கண்ணையும் -
அந்தக் தேவர்களின் கண்களையும்; மறைத்த - மறைத்தன;

     கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால்
வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை  ஒளிக்கதிர்கள் என்று
பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை
மயக்கமாகும். அன்று,  ஏ - அசைகள்.                      79

வசிட்ட முனிவன் வருகை  

1570.ஆயது ஓர் அமைதியின்கண்,
     ஐயனை மகுடம் சூட்டற்கு
ஏயும் மங்கலங்கள் ஆன
     யாவையும் இயையக் கொண்டு,
தூய நான்மறைகள்
     வேதபாரகர் சொல்ல, தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க,
     மா தவக் கிழவன் வந்தான்.

     ஆயது ஓர் அமைதியின்கண் - அத்தகைய சூழலில்;  மாதவக்
கிழவன் -
 பெரிய தவத்தைச் செய்த வசிட்ட முனிவன்;  ஐயனை மகுடம்
சூட்டற்கு -
இராமபிரானைமுடிசூட்டுவதற்கு;  ஏயும் மங்கலங்கள் ஆன
யாவையும் -
பொருந்திய மங்கலப் பொருள்களாகியஎல்லாவற்றையும்;
இயையக் கொண்டு - பொருத்தமுற எடுத்துக்கொண்டு;  வேத பாரகத்
தூயநான்மறைகள் சொல்ல -
வேதங்களைக் கரை கண்டவர்களான
அந்தணர்கள் தூய்மையான நான்குவேதங்களை ஓதிவர;  தொல்லை
வாயில்கள் நெருக்கம் நீங்க -
பழைய வாயில்களில்உள்ளவர்கள்
நெருக்கத்தை நீங்கி விலகிக்கொள்ள;  வந்தான் - முடிசூட்டு மண்டபத்துக்கு
எழுந்தருளினான்.

     வசிட்ட முனிவன்மீது உள்ள மரியாதையால் அங்கங்கே வாயில்களில்
நின்றவர்கள் விலகிவழிவிட்டனர். வாயில்கள் பழையன எனினும்  நெருக்கம் 
புதியது.  வேத பாரகர். - வேதத்தைக்கரை கண்டவர்கள்;  பாரம் -
அக்கரை.                                                     80

வசிட்ட முனிவன் செயல்  

1571.கங்கையே முதல ஆய கன்னி
     ஈறு ஆன தீர்த்த
மங்கலப் புனலும், நாலு வாரியின்
     நீரும் பூரித்து.