பக்கம் எண் :

160அயோத்தியா காண்டம்

இங்குக் கொண்டு வருவாய்;  என்ன - என்று பணிக்க;  பணி தலைநின்ற
காதல்சுமந்திரன் -
அம்முனிவனது கட்டளையைத் தலைமேற் கொண்டு
நின்ற அன்பு நிறைந்தசுமந்திரன்; பரிவின் சென்றான் - அன்போடு
விரைந்து  சென்றான்.

     வசிட்ட முனிவனுடைய தகுதிகளை நோக்கிப் ‘பெரியவன்’என்றார்
நோற்றலினும் அந்நெறி வழுவாது  நிற்றல் அருமைத்தாதலின் ‘நோற்று
நின்ற’என்றார்.  ‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து  இருந்த’ என்பதில்
(சிலப்பதிகம் - 1)‘இருந்த’ என்பது  போன்றது ‘நின்ற’  என்னும் இது.   82

கைகேயி, ‘இராமனை அழைத்து வா’ எனல்  

1573.வின் தொட நிவந்த கோயில், வேந்தர்தம்
     வேந்தன் தன்னைக்
கண்டிலன்; வினவக் கேட்டான்;
     கைகயள் கோயில் நண்ணி,
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல,
     மற்று அவரும் சொல்ல,
பெண்டிரில் கூற்றம் அன்னாள்,
     ‘பிள்ளையைக் கொணர்க’ என்றாள்.

     விண்தொட நிவந்த கோயில் - வானை அளாவி  உயர்ந்து  நின்ற
அரண்மனையில்; வேந்தர்தம் வேந்தன் தன்னை - அரசர்களுக்கு
அரசனாகிய தயரதனை;  கண்டிலன் -காணாதவானகி;  வினவ -
(அங்குள்ளாரைக்) கேட்க;  கேட்டான் - (அவர்கள்)சொல்லக் கேட்டு;
கைகயள் கோயில் நண்ணி - கைகேயியின் அரண்மனையை அடைந்து;
தொண்டைவாய் மடந்தைமாரின் சொல்ல - கொவ்வைக் கனிபோன்ற
வாயினையுடையதாதியரித்தில் தன் வருகையைத் தெரிவிக்க;  அவரும்
சொல்ல -
அத்தாதியரும்கைகேயியிடத்துத் தெரிவிக்க; பெண்டிரில்
கூற்றம் அன்னாள் -
மகளிருள் யமனைப்போன்ற அவள்; ‘பிள்ளையைக்
கொணர்க
- இராமனை அழைத்து வருக;’ என்றாள் -என்று சுமத்திரனை
நோக்கிக் கூறினாள்.

     தயரதன், கைகேயியின் அரண்மனையில் இருத்தலைக் கேட்டுச்
சுமந்திரன் அங்கே செல்ல, அவன் சக்கரவத்தியைக் காண்பதற்கு முன்னே
கைகேயி அவனைப் பார்த்து இராமனை அழைத்துவரப்பணிந்தாள்.
கணவனைக் கொல்லத் துணிந்தவாளாதலின்,  ‘கூற்றம் அன்னாள்’ என்றார்.
கண்டிலன்,  கேட்டான் - முற்றெச்சங்கள்.  மற்று - அசை.            83

சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்  

1574.‘என்றனள்’ என்னக் கேட்டான்;
     எழுந்த பேர் உவகை பொங்கப்