தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய; மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி- தயரத மன்னனின் கட்டளையிலிருந்து மாறுபடுவதற்குப் பயந்து; இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள் நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற; இன்னலுக்குஇயைந்து நின்றான் - துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்; உருள் உடைச்சகடம் பூண்ட - சக்கரத்தையுடைய வண்டியில பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த கார் ஏறு -உடையவனாலே செலுத்தப்பட்ட கரிய காளையானது; அருள் உடை ஒருவன் நீக்க - கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய பூட்டினை அவிழ்த்து விட; அப் பிணி அவிழ்ந்ததுஒத்தான் - அப் பிணிப்பிலிருந்து விடுபட்டதைப் போல ஆனான். அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற் பூட்டிய காளையாகவும் கூறுதல்மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம்நீங்கி இருந்தனன் என்றவாறு. இஃது உவமை அணி. சகடம் - அரசாட்சி; உடையவன் - தயரதன்;கார் ஏறு - இராமன் இருள் - இடத்து நிகழ் பொருளின் தன்மை இடத்தின்மேல் ஏற்றிஉரைக்கப்பட்டது. நின்றான் - வினையாலணையும் பெயர். 113 கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல் 1604. | ‘மன்னவன் பணி அன்றாகின், நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ? என் இனி உறுதி அப்பால்? இப் பணி தலைமேல் கொண்டேன்; மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’ |
‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று என்றாலும்; நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான் செய்யமாட்டேன் என்பேனோ?; என் பின்னவன்பெற்ற செல்வம் - என் தம்பி பரதன் அடைந்த பேறு; அடியனேன் பெற்றது அன்றோ -நான் அடைந்தது அன்றோ?; அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான நன்மை வேறுயாது?; இப் பணி தலைமேல் கொண்டேன் - இக்கட்டளையைத் தலையின்மேல்ஏற்றுக்கொண்டேன்; மின் ஒளிர் கானம் - மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு; இன்றே போகின்றேன் - இப்பொழுதே போகின்றேன்; விடையும்கொண்டேன் - நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன். அரசன் கட்டளையிட வேண்டும் என்பதில்லை; நமது கட்டளையே போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன். ‘மன்னவன் பணி அன்று |