பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 179

     தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய;
மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி- தயரத மன்னனின் கட்டளையிலிருந்து
மாறுபடுவதற்குப் பயந்து;  இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள்
நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற;  இன்னலுக்குஇயைந்து நின்றான் -
துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்;  உருள் உடைச்சகடம்
பூண்ட -
சக்கரத்தையுடைய வண்டியில பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த
கார் ஏறு -
உடையவனாலே செலுத்தப்பட்ட  கரிய காளையானது;  அருள்
உடை ஒருவன் நீக்க -
கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய
பூட்டினை அவிழ்த்து விட;  அப் பிணி அவிழ்ந்ததுஒத்தான் - அப்
பிணிப்பிலிருந்து  விடுபட்டதைப் போல ஆனான்.

     அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற்
பூட்டிய காளையாகவும்  கூறுதல்மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய
இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம்நீங்கி இருந்தனன்
என்றவாறு.  இஃது  உவமை அணி.  சகடம் - அரசாட்சி;  உடையவன் -
தயரதன்;கார் ஏறு - இராமன் இருள் - இடத்து  நிகழ் பொருளின் தன்மை
இடத்தின்மேல் ஏற்றிஉரைக்கப்பட்டது.  நின்றான் - வினையாலணையும்
பெயர்.                                                      113

கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல்  

1604.‘மன்னவன் பணி அன்றாகின்,
     நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
     அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
     இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே
     போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

     ‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று
என்றாலும்;  நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான்
செய்யமாட்டேன் என்பேனோ?; என் பின்னவன்பெற்ற செல்வம் - என்
தம்பி பரதன் அடைந்த பேறு;  அடியனேன் பெற்றது அன்றோ -நான்
அடைந்தது அன்றோ?; அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான
நன்மை வேறுயாது?;  இப் பணி தலைமேல் கொண்டேன் -
இக்கட்டளையைத் தலையின்மேல்ஏற்றுக்கொண்டேன்;  மின் ஒளிர்
கானம்
- மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு;  இன்றே
போகின்றேன் -
இப்பொழுதே போகின்றேன்;  விடையும்கொண்டேன் -
நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன். 

     அரசன் கட்டளையிட வேண்டும் என்பதில்லை; நமது கட்டளையே
போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன். ‘மன்னவன் பணி அன்று