|   | பெய்     வளைத் தளிரால் பிசையும்; புகை     வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால். |  
      (கோசலை),  கையைக் கையின் நெரிக்கும் - கையை மற்றொரு     கையால் நெரிப்பாள்;தன்காதலன் வைகும் - தன் மகளாகிய இராமன்     தங்கிய;  ஆல் இலை அன்ன வயிற்றினைப்பெய் வளைத்தளிரால்     பிசையும் - ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல்     அணிந்ததளிர் போன்ற கைகளால் விசைவாள்;  புகை வெய்து     உயிர்க்கும் - உள் நெருப்பால்புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்;     விழுங்கும் - அவ் உயிர்ப்பை அடக்குவாள்;  புழுங்கும் - வெம்பிப்     போவாள்.      கோசலையின் துயரத் துடிப்பின் மெய்ப்பாடுகள் இங்கு அடுக்கியுள்ளன.     ‘ஆல்’ஈற்றசை.                                               10 | 1616. | ‘நன்று     மன்னன் கருணை’ எனா நகும்;     நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து     என்று போவது? எனா எழும்; இன் உயிர்     பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே. |  
      ‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால்     காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற     மைந்தனை நோக்கி - தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ்     சுரத்துப் போவது என்று’  எனா  எழும் - நீண்டகாட்டு வழியில்     போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்;  இன் உயிர்     பொன்றும்போது  உற்றது - இனிய உயிர் போகும்போது அடைகின்ற     மரண வேதனையை;  உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல     ஆனாள்.      தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர்     அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை.                              11 | 1617. | ‘அன்பு இழைத்த     மனத்து அரசற்கு, நீ     என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால் -     முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்,     பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே. |  
      ‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்துப் பேரன்பு     செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீ என்     பிழைத்தனை’ - நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று - என்று     சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் -     முற்பிறவியிற்  |