பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 195

1632.‘அவனி காவல் பரதனது ஆகுக;
இவன் இஞ்ஞாலம் இறந்து, இருங் கானிடைத்
தவன் நிலாவகை காப்பென், தகவினால்
புவனி நாதன்- தொழுது’ என்று, போயினாள்.

     ‘அவனி காவல் பரதனது ஆகுக - இந்த உலகத்தை ஆளும்
அரசாட்சி பரதனுடையதுஆகட்டும்;  இவன் - இராமன்;  இஞ்ஞாலம்
இறந்து -
இக் கோசல நாட்டைத்தாண்டி; இருங் கானிடை - பெரிய
காட்டிடத்தே;  தவன் நிலாவகை - தவத்தில்நில்லாதபடி; தகவினால் -
நடுவு நிலைமையால்;  புவனி நாதன் தொழுது - தயரதனைவணங்கி
வேண்டி; காப்பென் - ‘காப்பாற்றுவேன்; என்று போயினாள் - என்று
(தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள்.

     முறைப்படி அரசன்பால் வேண்டி  அவன் இட்ட ஆணையே மாற்ற
எண்ணுதலின் ‘தகவினால்’என்றார்.  தவம்,  தவன் என்றமைந்தது ஈற்றுப்
போலி.                                                      27

இராமன் சுமித்திரை மாளிகை அடைதல்  

1633.போகின்றாளைத் தொழுது, புரவலன்
ஆகம் மற்று அவள்தன்னையும் ஆற்றி, இச்
சோகம் தீர்ப்பவள்’ என்று, சுமித்திரை
மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான்.

     (இராமன்) போகின்றானைத் தொழுது - செல்கின்ற கோசலையை
வணங்கி; புரவலன்ஆகம் மற்று அவள் தன்னையும் - தயரதனது
உடம்பையும் கோசலையையும்; ஆற்றி -துன்பத்திலிருந்து  ஆறுதல்
அடையச் செய்து;  இச்சோகம் தீர்ப்பவள்’ - இந்தத் துயரநிலையை
நீக்கக்கூடியவள்;  என்று - எனக் கருதி;  சுமித்திரை -சிற்றன்னையாகிய
சுமித்திரையின்;  மேகம் தோய் தனிக்கோயிலை - மேகம்தங்குகின்ற 
உயர்ந்த ஒப்பற்ற  மாளிகையை;  மேயினான் - அடைந்தான்.

     ‘புரவலனது ஆகமாகிய மற்றவள்’ எனவும் உரைப்பர். ‘மன்னன் உயி்ர்
அவள் உடல்’என்றார்.                                        28

கோசலை தயரதன் நிலை கண்டு புலம்புதல்  

1634.நடந்த கோசலை, கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்