திருவே! -செல்வங்களுக்கெல்லாம் மேலான செல்வமே; நிரை ஆர் கலையின் கடவே! - ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல் ஆனவனே; நெறி ஆர் மறையின் நிலையே! - நீதிபொருந்திய வேதத்தின் உன்மைப் பொருளே; கருணாலயனே! - அருட்கோயிலாக உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும் உடையவனே; கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை; நீ என் என்று உரையா இதுதான் அழகோ’ - நீஏன் வருந்துகிறாய் என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்- தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டுவைத்தும் எழுந்து அவளுக்கு ஆறுதல் சொல்லாது கணவன்கிடக்கின்ற நிலை கண்டு மனம் வருந்திப் புலம்பினாள். 32 | 1638. | ‘மின் நின்றனைய மேனி, வெளிதாய்விட நின்றதுபோல் உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்; என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்; மன்னன் தகைமை காண வாராய்; மகனே!’ என்னும். | ‘மகனே! - இராமனே; மின் நின்றனைய மேனி - மின்னல் மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு; வெறிதாய் விட நின்றது போல் - உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல; உன்னும் தகைமைக்கு அடையா உறுநோய் - நினைக்கும்தன்மைக்கும் வாராத பெரும் பிணியை; உறுகின்ற உணரான் - அடைகின்றதையும் உணர முடியாதவனாய்; என்என்று உரையான் - அழுகின்ற என்னைப் பார்த்து ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய்உள்ளான் உன் தந்தை; என்னே! - என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் -இது எதனால் ஆகியது என்று அறியாதவளாக இருக்கின்றேன்; மன்னன் தகைமை காண -அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க; வாராய்’ - வருவாயாக; என்னும் - உணர்வு இழந்து மூர்ச்சித்துக் கிடக்கிற மன்னனைப் பார்த்து அவன் நிலை காண வரும்படிமகனை அழைத்துப் புலம்பகிறாள் கோசலை. 33 வசிட்டன் வருதல் | 1639. | இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம், |
|