பக்கம் எண் :

202அயோத்தியா காண்டம்

     (இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி - குளிர்ச்சியை
உடைய பனிநீரைக்கலந்து; திண்கால் உக்கம் - வலிய கைப்பிடி உடைய
விசிறியினது;  மென்கால் -மெல்லிய காற்றை;  போதத்து அளவே
தவழ்வித்து -
மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும்அளவில் நிகழச் செய்து;
இன்சொல் புகலாநின்றான் - இனிய சொற்களைச்சொல்லுகின்றவன்;
ஒதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய -
கடலின்கண்எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும்
வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க;  காதற் புதல்வன் - அன்பு
மகனாகிய இராமனது;  பெயரே புகல்வான் - பெயரையேசொல்லிக்
கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் - உயிரையும் பார்த்தான்.

     முனிவன் மென்காற்று வீசி, இன்சொல், கூறி, சோகம், தணிவிக்க,
சற்றே மூர்ச்சைதெளிந்து ‘இராமா, இராமா’ என்று பிதற்றுகின்ற தயரதனுக்கு
உயிர்ப்பு நிலை வந்தது; அதுகண்டான் என்பதாம்.                  38

1644.காணா, ‘ஐயா! இனி, நீ
     ஒழிவாய் கழி பேர் அவலம்;
ஆண் நாயகனே, இனி, நாடு
     ஆள்வான்; இடையூறு உளதோ?
மாணா உரையாள், தானே
     தரும்; மா மழையே அனையான்
பூணாது ஒழிவான் எனின், யாம்
     உளமோ? பொன்றேல்’ என்றான்.

     காணா - அரசன் மூர்ச்சை தெளிந்தது கன்டு; ‘ஐயா! - ஐயனே; நீ
இனிகழிபோர் அவலம் ஒழிவாய் -
நீ இனிமேல் இம்மிகப் பெரிய
துன்பத்தை நீக்கிக்கொள்வாயாக;  ஆண் நாயகனே இனி நாடு
ஆள்வான் -
புருஷோத்தமனாகிய இராமனே இனிஇந்நாட்டை ஆட்சி
செய்வான்; இடையூறு உளதோ? -  அதற்கு வேறு இடையூறு ஏதேனும்
இருக்கின்றதா,  இல்லை;  மாணா உரையாள் - மாட்சியை இல்லாத
வார்த்தையாகியவரத்தைக் கேட்ட கைகேயியானவள்;  தானே தரும் -
(அரசைத்) தானே இராமனக்குத்திருப்பித் தருவாள்;  மாமழையே
அனையான் -
பெரிய மேகத்தை ஒத்தவனாகிய இராமன்; பூணாது
ஒழிவான் எனின் -
அரசை மீண்டும் மேற் கொள்ளாது போவானாயின்;
யாம் உளமோ?- நாங்களும் இருக்கப் போகிறோமா;  பொன்றேல்! -
மனம் அழியாதே;  என்றான் -

     தன் சொற்கேட்டுக் கைகேயி மறுக்க மாட்டாள் என்னும் துணிபுபற்றி
வசிட்டன் ‘ஆண்நாயகனே இனி நாடு ஆள்வான்’  என்றான்.  ‘ஏ’ காரம்
தேற்றம். கைகேயி தந்துவிடுவாள்,ஒருவேளை இராமன் ஏற்காது போனால்