| 1651. | தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன், நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி, ‘பாவி! நீயே, "வெங் கான் படர்வாய்" என்று, என் உயிரை ஏவினாயோ? அவனும் ஏகினானோ?' என்றான். |
தா இல் முனிவன் புகல - குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு சொல்ல; தளராநின்ற மன்னன் - வருத்தத்தால் தளர்கின்ற சக்கரவர்த்தி; நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி - நாக்கிலே விடம் உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து; ‘பாவி! நீ என் உயிரை வெங்கான் படர்வாய்' என்று-பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக் கொடிய காட்டிற்குச் செல்க என்று; ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ; அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;' என்றான்-. "நாகம் எனும் கொடியாள்தன் நாவின் வந்த சோகவிடம்" என முன்னும் (1505.) வந்துள்ளதை‘நாவில் நஞ்சம் உடைய நங்கை' என்பதனுடன் ஒப்பிடுக. ‘நீயே' ‘ஏ' காரம் பிரிநிலை. ‘ஓ'காரம் வினாப் பொருட்டு. 46 | 1652. | ‘கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனி வாய் விடம் நான் நெடு நாள் உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்; பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக் கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன். | ‘பாவி! - பாவியே; நெஞ்சம் கண்டேன் - உன் மனக்கருத்தை இப்போது அறிந்தேன்; நான் கனிவாய்க் கனி வாய் விடம் நெடுநாள் உண்டேன் - நான் அன்போடு பழம்போன்ற உன்னுடைய வாயிலிருந்த விடத்தை நீண்ட நாள் சாப்பிட்டுவிட்டேன்; அதனால்-; நீ என் உயிரை முதலோடு உண்டாய் - நீ என்னுடைய உயிரை அடியோடு சாப்பிட்டுவிட்டாய்; உன்னைப் பண்டே எரிமுன் தேவியாகக் கொண்டேன் அல்லேன் - உன்னை முன்பு வேள்வித் தீயின்முன் மனைவியாக (நான்) கொள்ளவில்லை; வேறு ஓர் கூற்றம்தேடிக் |