| | ‘சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்; மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு' என்றான். |
இன்னே - இவ்வாறு; பலவும் பகர்வான் - பல சொற்களையும் சொல்பவனாயதயரதன்; இரங்காதாளை நோக்கி - சிறிதும் மனம் இளகாத கைகேயியைப் பார்த்து; முனிவா! - முனிவரே; இன்றே சொன்னேன், இவள் என் தாரம் அல்லள், துறந்தேன் -இப்பொழுதே சொல்லிவிட்டேன்; இவள் இனி என் மனைவி என்னும் தகுதிக்கு உரியவள்அல்லள் - இவளை நான் கைவிட்டேன்; மன்னே ஆவான் வரும் அப்பரதன்தனையும் -அரசனாக முடி சூடுதற்கு வருகின்ற இவள் மகனாகிய அந்தப் பரதனையும்; மகன் என்று உன்னேன் -என் மகன் என்ற கருதேன்; அவனும் உரிமைக்கு ஆகான் - அப்பரதனும் எனக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடன்களுக்கு உரியவனாகான்;' என்றான்-. கைகேயியை மனைவி அல்லள் எனவும், பரதனை மகன் அல்லன் எனவும் துறந்தான் தயரதன். அதை முனிவன்பால் அறிவித்தான். பகர்வான், இரங்காதாள் -வினையாலணையும் பெயர்கள். சொன்னேன் - உறுதிபற்றிய கால வழுவமைதி. 49 கோசலையின் துயர்நிலை | 1655. | ‘என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் உன்னைக் கண்டும் இலனோ?' என்றான், உயர் கோசலையை; பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம், தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள். |
(தயரதன்) உயர் கோசலையை - உயர்ந்த கோசலையைப் பார்த்து;' என்னைக்கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் - என்னைப் பார்த்துப் போகாதவாறு இடையூறு உடையஇராமன்; உன்னைக் கண்டும் இலனோ? - உன்னையும் பார்த்துப் போகவில்லையோ;' என்றான் - ; பின்னை - பிறகு; கண்தான் அனையான் |