பக்கம் எண் :

212அயோத்தியா காண்டம்

மாறிச் சோர்வாள்;  ‘மகனைக் காவாய்'  என்னாள் - வனம்  போகாமல்
இருந்து தந்தையின் உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச்
சொல்லமாட்டாள்; கணவன்புகழுக்கு அழிவாள் - தயரதனது புகழுக்குக்
கேடு வருமோ என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ;  உயர் கோசலை
ஆம் அன்னம் -
உயர்ந்த கோசலையாகிய அன்னம்  போல்வாள்; என்
உற்றனள் - 
என்ன துன்பப்பட்டாள்.

     மகனைத் தடுத்தால் கணவன் புகழுக்கு அழிவு,  மகனைத் தடுக்காது
விட்டால் கணவன் உயிர்க்குஅழிவு.  இரண்டில்  எதனையும்  செய்ய
இயலாது  உள்ளம்  தடுமாறினாள். ஆ! ஆ!  இரக்கக் குறிப்பு.அந்தோ, 
ஐயகோ  என்னும்  பொருளது.                                  53

தயரதன் புலம்பல்  

1659.உணர்வான், அனையாள் உரையால்,
     ‘உயர்ந்தான் உரைசால் குமரன்
புணரான் நிலமே, வனமே
     போவானே ஆம்' என்னா; -
இணர் ஆர்தரு தார் அரசன் -
     இடரால் அயர்வான்; ‘வினையேன்
துணைவா! துணைவா' என்றான்;
     ‘தோன்றால், தோன்றாய்!' என்றான்.

     இணர் ஆர்தரு தார் அரசன்- பூங்கொத்துகள் பொருந்திய மாலை
அணிந்த தயரதமன்னன்; அனையாள் உரையால்- அந்தக் கோசலையின்
வார்த்தையால்; ‘உயர்ந்தான் உரைசால் குமரன் - உயர்ந்தவனாகிய புகழ்
பெற்ற இராமன்; நிலமேபுணரான் - நிலத்தை ஆள மாட்டான்; வனமே
போவானே ஆம்! -
காட்டிற்குப்போபவனே ஆவான்; என்னா - எனக்
கருதி; இடரால் அயர்வான் - துன்பத்தால் சோர்கின்றவன்; ‘வினையேன்
துணைவா!  துணைவா' என்றான் -
தீவினையேனாகிய என்னுடைய
தோழனே தோழனே என்றான்;  ‘தோன்றால்! தோன்றாய் - மகனே
என்முன் வருவாயாக;  என்றான் -.

     ‘துணைவா துணைவா' புலம்பலில் வந்த அடுக்கு.                54

1660.‘கண்ணும் நீராய், உயிரும்
     ஒழுக, கழியாநின்றேன்;
எண்ணும் நீர் நான்மறையோர்,
     எரிமுன் நின்மேல் சொரிய,
மண்ணும் நீராய் வந்த
     புனலை, மகனே! வினையேற்கு