| | உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்!' என்றான். |
‘மகனே! - இராமனே; கண்ணும் நீராய் - கண்கள் இரண்டும் நீராகி; உயிரும் ஒழுக - உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல; கழியாநின்றேன் -இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு - இப்படித் தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர்நான் மறையோர் - மதிக்கப்படும் தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன்நின்மேல் சொரிய - மூடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால் உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி; மண்ணும் நீராய் வந்த புனலை - அபிடேகசுத்த நீராக வந்த தீர்த்த நீரை; (இனி அதற்குத் தேவை இன்மையால்) உண்ணும் நீராய்உதவி - நான் இறந்த பிறகு எனக்குச் செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு); உயர்கான் அடைவாய்' - உயர்ந்த காட்டை அடைவாயாக; என்றான்- முடிபுனைந்து நீராட்டப் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவருவர். அது ‘மண்ணு மங்கலம்' எனப்படும். அதுவே ‘மண்ணும் நீர்' எனப்பட்டது. இறந்த பின் பத்து நாளும் வளர்ந்துஎழுகின்ற பிரேத பூதத்துக்குத் தாகசாந்தி செய்ய நித்தியவதி என்னும் பெயரால் நீர்க்கடன்இறுத்தல் மகனது கடன்; ஆதலால் அதனைத் தயரதன் இராமனைச் செய்ய வேண்டினான். 55 | 1661. | ‘படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான், மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்! "உடைமா மகுடம் புனை" என்று உரையா, உடனே கொடியேன் சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ!" என்றான். | படைமாண் அரசை - சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை; பல கால் - இருபத்தொரு தலைமுறை; பழுவாய் மழுவால் - பழுக்கக் காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்டமழுப்படையால்; எறிவான் - வெட்டி அழித்தவனும்; மிடை மா வலி தான் அனையான் -செருக்கிய மிக்க பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால் அடுமாவல்லாய்! - வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை) ‘உடைமா மகுடம் புனை' என்று உரையா - உன்னுடைய பெரிய முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே-அப்பொழுதே; சடை மா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ' - சடையாகிய பெரியமகுடத்தை அணிந்துகொள்ளும்படி தந்துவிட்டேனே ஐயகோ; என்றான்- |