‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! - பொன்னுக்கு மேற்பட்டுப்பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே; புகழின் புகழே! - புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! - மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்தவில்லை உடைய குமரனே; மெய்யின் மெய்யே! - உண்மையின் நிலைபேறே; என்னின் முன்னம் - எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு; யான்எளியேன் அல்லேன் - நான் எளிமை உடையவன் அல்லன்; உன்னின் முன்னம் - உனக்குமுன்னால்; உயர் வானகம் புகுவேன்!- உயர்ந்த விண்ணை அடைவேன்;' என்றான்-. ‘கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும், வானகமே மிக விரும்பிப்போகின்றேன். மனுகுலத்தார் தங்கள் கோவே' என்ற (திவ்ய.738) குலசேகராழ்வார் பாசுரமும்காண்க. 58 | 1664. | ‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும், நேயத்தாலே ஆவி உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப் புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன்' என்றான். | ‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் - உருகுதற்குப் பொருந்திய மனமும்; நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்- உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்; உன்போல் அல்லேன் - உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும் உடையேனல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி - தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக் கொண்டு; புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ) புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்'-(அயோத்தியைவிட்டுக்) காடு செல்வதைக் காண மாட்டேன்;' என்றான்-. ‘ஏ' காரம் அசை. தன் நிலை இவ்வாறாகவும் இராமன் வனமேத் துணிந்தமை பற்றி‘உன்போல் அல்லேன்' என்று அவனை வன் மனமும் வல் உடலும் உடையவனாகக் குறித்தான்தயரதன். 59 | 1665. | ‘எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும், |
|