பக்கம் எண் :

244அயோத்தியா காண்டம்

1711.‘நின்று தவம் இயற்றித்
     தான் தீர நேர்ந்ததோ?
அன்றி, உலகத்துள்
     ஆர் உயிராய் வாழ்வாரைக்
கொன்று களையக்
     குறித்த பொருளதுவோ?
நன்று! வரம் கொடுத்த
     நாயகற்கு, நன்று!’ என்பார்.

     ‘தான் - சக்கரவர்த்தி;  தவம் இன்றி - (காடு சென்று) தவம் செய்து;
தீர நேர்ந்ததோ? - இவ்வுலகினின்று விடுதலை பெற உடன் பட்டதோ;
அன்றி -அதுவல்லாமல்;  உலகத்துள் - இப்பூமியின்கண்; ஆர் உயிர்
ஆய
்- அரியஉயிரோடு கூடி; வாழ்வாரை - வாழ்கின்ற மக்களையெல்லாம்;
கொன்று  களையக்குறித்த பொருளதுவோ? - கொன்று அடியோடு அழிக்க மனத்தில் கருதிய காரியமோ;  நன்று!- நன்றாயிருந்தது;  வரம் கொடுத்த நாயகற்கு - வரம் கொடுத்த தயரதனுக்கு;  நன்று! - வரம் கொடுத்த செயல் மிக நன்றாயிருந்தது;’  என் பார் -.

     நன்று நன்று என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இவ்வரத்தால் இராமன் காடு
செல்லின் மக்கள்இறந்துபடுவர் என்பது  அரசன் அறியாததன்று. அறிந்தே
மக்களைக் கொன்று  தீர்க்க வரம்கொடுத்தானோ எனப் புலம்பினர்.
‘உலகத்துள்ளார் உயிராய் வாழ்வார்  இராமனை  உயிராகக்கொண்டு
வாழ்பவர் ஆகிய உலகினரை ’ எனினும் ஆம்.                     106

1712.‘பெற்றுடைய மண் அவளுக்கு
     ஈந்து, பிறந்து உலகம்
முற்று உடைய கோவைப்
     பிரியாது மொய்த்து ஈண்டி,
உற்று உறைதும்; யாரும்
     உறையவே, சில் நாளில்.
புற்று உடைய காடு எல்லாம்
     நாடாகிப் போம்’ என்பார்.

     ‘பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து- (வரத்தால்) பெற்றுத் தனக்குச்
சொந்தமாகிக்கொண்ட இராச்சியத்தைக் கைகேயிக்குக் கொடுத்து; பிறந்து
-
(மூத்தவனாகப்) பிறந்து; உலகம் முற்றுடைய கோவை - உலகம் முழுதும்
தனக்கு உரியதாகப்பெற்ற இராமனை; பிரியாது - பிரிந்து நகரத்தில்
வாழாது;  யாரும் மொய்த்து ஈண்டி  உற்று உறைதும் - எல்லாரும்
நெருங்கிச் சென்று (அவனுடைய) தங்கி