மயிர் சுருஏறி நாற; விண்ணில் சுடரும் சுடர் தோன்ற - வானத்தில் ஒளிவீசும் சூரியன்இலக்குமணனிடமாகித் தோன்ற; மெய்ந்நீர் விரிப்ப - உடம்பு வியர்வைத் துளிகளைஎங்கும் பரவச் செய்ய; உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க -உடம்பின் உள்ளே உள்ள நெடு மூச்சு என்னும் காற்று வெளித் தோன்ற; நின்ற அண்ணல்பெரியோன் - சீறி நின்ற தலைமைப்பாடு உடைய இலக்குமணன்; தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் - தனது பூர்வ வடிவமாகிய (ஆயிரம் தலை உடைய) ஆதி சேடனைப் போன்றிருந்தான். ‘நெற்றியில் கற்றை நாற’ என்பதற்கு நெற்றி மேல் புருவமயிர் தொகுதி தோன்ற எனஉரைக்கலாம். சீற்றம் மிக்குழிப் புருவம் நெரிந்து நெற்றிமேல் ஏறல் மெய்ப்பாடாம்; இங்கே நாற என்பது தோன்ற என்னும் பொருள். பெறும். ‘புன்புல மயிரும் பூவாக் கட்புலம் புறத்து நாறா வன்பறழ்’ என்புழிப் (4746.) போல இலக்குவன் ஆதிசேடனது அவதாரம் ஆதலின்’ ஆதியின்மூர்த்தி’ என்றார். அரவின் சீற்றம் போன்றது இலக்குவன் சீற்றம் என்பதாம். சூரியன்நெற்றியில் தோன்றச் சினநெருப்பு ஒளிவீசுதல் சூரியன் போலுதலாகும். 112 கைகேயிமேல் சினந்து இலக்குவன் போர்க்கோலம் மேற்கொளல் 1718. | ‘சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின் வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே! நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!’ என்னா, கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். |
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை - சிங்கக் குட்டிக்குக் கொடுத்தற்குரிய இனிய சுவையுடைய மாமிசத்தை; வெங்கண்நாயின் சிறு குட்டனை - கொடிய கண்ணை உடைய நாயின் சிறு குட்டிக்கு; ஊட்ட விரும்பினாளே! -உண்பிக்க ஆசைப்பட்டாளே; நங்கைக்கு - கைகேயிக்கு; அறிவின் திறம் நன்று இது!நன்று இது’ - புத்தி வன்மையாகிய இது நன்றாயிருந்தது;’ என்னா - எனச் சொல்லி; கங்கைக்கு இறைவன் - இலக்குவன்; கடகக் கை - கடகம் அணிந்ததன்னுடைய கையை; புடைத்து - தட்டி; நக்கான் - சிரித்தான். பொருத்தம் அற்ற செயல் செய்தாள் கைகேயி என்பதை இவ்வாறு கூறினான். சிறுகுட்டனை -குட்டனுக்கு உருபுமயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ‘நன்று இது’ இகழ்ச்சிக்குறிப்பு - கங்கைவரை உள்ள நாடு கோசலம் ஆதலின் இலக்குவன் ‘கங்கைக்கிறைவன்’எனப்பட்டான். இனி சரயு நதிக்கு ‘இராமகங்கை’ எனும் பெயருண்மையின் அதுபற்றிக் ‘கங்கைக் |