பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 249

கிறைவன்’ எனப்பட்டான் என்பது  ஏற்குமேல்  கொள்க.              113

1719.சுற்று ஆர்ந்த கச்சில்
     சுரிகை புடை தோன்ற ஆர்த்து,
வில் தாங்கி, வாளிப்
     பெரும் புட்டில் புறத்து வீக்கி,
பற்று ஆர்ந்த செம் பொன்
     கவசம், பனி மேரு ஆங்கு ஓர்
புற்று ஆம் என ஓங்கிய
     தோளொடு, மார்பு போர்க்க.

     சுற்று ஆர்ந்த கச்சில்- இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே;
கரிகை -வாளை; புடை தோன்ற ஆர்த்து - வெளியில் தெரியும்படி
கட்டி; வில் தாங்கி -வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து
வீக்கி -
அம்புகள் அமைந்த பெரியதூணியை முதுகுப்புறத்தில்
கட்டியமைத்து;  பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் - நன்றாகப்பிடிப்புப்
பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று
ஆம் என -
குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி;
ஓங்கிய தோளொடு -உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க -
மார்பையும்  மூடிக்கொள்ள.

     இடுப்பைச் சுற்றியுள்ள கச்சில் வாளைச் செருகுதல் இயல்பு. தோளின்
பெருமை நோக்கமேருமலை ஒரு புற்றுப் போலத் தோன்றும் என்றார்.  114

1720.அடியில் சுடர் பொன்
     கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப
பிடியில் தடவும் சிலை
     நாண் பெரும் பூசல் ஓசை,
இடியின் தொடர,
     கடல் ஏழும் மடுத்து, இஞ் ஞால
முடிவில் குமுறும்
     மழை மும்மையின்மேல் முழங்க,

     அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப -
பாதங்களில் ஓளிவீசும்பொன்னால் ஆகிய வீரக்கழலை கடல் வெட்கமுறும்
படி பேரொலி செய்ய; பிடியில் தடவும் -கைப்பிடியால் தடவப் பெறுகின்ற;
சிலை நாண் பெரும் பூசல் ஓசை - வில்லினதுகயிற்றைத் தெறிப்பதால்
உளதாகும் பெரிய ஆரவார ஒலி; இஞ்ஞால முடிவில் - இந்த உலக
முடிவில்;  கடல் ஏழும்  மடுத்து - ஏழு கடல்களையும் குடித்து;  இடியின்
தொடர -
இடிகளோடு தொடர்ந்து;  குமுறும்-