பக்கம் எண் :

252அயோத்தியா காண்டம்

1724.காலைக் கதிரோன் நடு உற்றது ஓர்
     வெம்மை காட்டி,
ஞாலத்தவர் கோ மகன்,  அந்
     நகரத்து நாப்பண்,
மாலைச் சிகரத் தனி
     மந்தர மேரு முந்தை
வேலைத் திரிகின்றதுபோல்,
     திரிகின்ற வேலை,-

     ஞாலத்தவர் கோ மகன் - சக்கரவர்த்தியின் இளைய மகனாகிய
இலக்குவன்; காலைக் கதிரோன் - காலை இள ஞாயிறு; நடு உற்றது ஓர்
வெம்மை காட்டி -
உச்சிக்கு வந்தாற்போன்ற ஒரு வெப்பக் கடுமையைக்
காட்டி; முந்தை - முன்காலத்தில்; மாலைச் சிகரத் தனி மந்தர மேரு -
ஒழுங்கான குடுமிகளை உடைய ஒப்பற்ற மந்தர மலை; வேலைத்
திரிகின்றது
  போல - கடலின் கண் (மத்தாக) சுழல்கின்றது  போல;
அந்நகரத்து நாப்பண் - அவ் அயோத்தி  நகர நடுவில்; திரிகின்ற
வேலை -
சுழன்று வருகின்ற நேரத்தில்.

     பாற்கடலைக் கடையும்போது மந்தர மலையை மத்தாக்கிக் கடைந்த
போது  ‘மந்தரமாலைசுழன்றதுபோல’ என அதனை இலக்குவன்
திரிகின்றமைக்கு உவமையாக்கினார்.                              119

இலக்குமணன் நாணொலி கேட்டு இராமன் வருதல்  

1725.வேற்றுக் கொடியாள்
     விளைவித்த வினைக்கு விம்மி,
தேற்றத் தெளியாது அயர்
     சிற்றவைபால் இருந்தான்,
ஆற்றல் துணைத் தம்பிதன்
     வில் - புயல், அண்ட கோளம்
கீற்று ஒத்து உடைய, படும்
     நாண் உரும் ஏறு கேளா.

     வேற்றுக் கொடியாள் - மனம் வேறுபட்ட கொடியவளான கைகேயி;
விளைவித்தவினைக்கு - உண்டாக்கிய துன்பச் செயலுக்கு;  விம்மி -
கலங்கி; தேற்ற - ஆறுதல் கூறவும்;தெளியாது - மனம் சமாதானம்
அடையாமல்; அயர் - சோர்கின்ற; சிற்றவைபால்இருந்தான் -
சுமித்திரையாகிய சிற்றன்னையிடத்தே இருந்தவனாகிய இராமன்; ஆற்றல்-
வலியிற் சிறந்த; துணைத் தம்பிதன்- தனக்குத் துணையாகிய இலக்குவனது;
வில்புயல் - வில் என்கிற மேகத்