பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 253

திருந்து; அண்ட கோளம் - உலக உருண்டை; கீற்று ஒத்து உடைய- கீறு
கீறாகப் பிளவுபட்டுத் தரும்படி; படும் - உண்டாகிய; நாண் உரும் ஏற -
நாணொலியாகிய இடியேற்றொலியை;  கேளா - கேட்டு.

     இராமன் சுமித்திரை  மாளிகை சென்றதை  இப்படலத்து
இருபத்தெட்டாம் பாடலிற் காண்க.கேளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம்.  அது  ‘வந்தான்’ என அடுத்த பாட்டில் முடியும்.      120

1726.வீறு ஆக்கிய பொற் கலன்
     வில்லிட, ஆரம் மின்ன,
மாறாத் தனிச் சொல் துளி
     மாரி வழங்கி வந்தான்-
கால் தாக்க நிமிர்ந்து, புகைந்து
     கனன்று, பொங்கும்
ஆறாக் கனல் ஆற்றும் ஒர்
     அஞ்சன மேகம் என்ன.

     வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட - அழகிற் சிறந்த பொன்னால்
ஆகிய அணிகலன்ஒளி வீச;  ஆரம் மின்ன - (மார்பில்) முத்துவடம்
ஒளிவிட்டு விளங்க;  கால்தாக்க - புயற்காற்று வீச;  நிமிர்ந்து -
மேல்நோக்கி; புகைந்து - புகைபொங்கி; கனன்று - எரிந்து; பொங்கும் -
மேலும் மிகுகின்ற;  ஆறாக்கனல் - அணையாத நெருப்பை;  ஆற்றும் -
அணைக்கின்ற;  ஓர் அஞ்சன மேகம் என்ன- ஒரு மை போலும் கரிய
மேகம் போல; மாறா - மாறுபடாத; தனிச் சொல் மாரித்துளி - ஒப்பற்ற
சொல்லாகிய மழைத் துளியை;  வழங்கி - சொல்லிக்கொண்டு; வந்தான்-

     நெருப்பு.  இலக்குவன் சீற்றம்.  அது தணிக்குஞ் சொல் மழைத்துளி
வழங்கும் அஞ்சன மேகம்இராமன் என உருவகம் கொள்க.           121

இராமன் இலக்குவனுடன் உரையாடுதல்  

1727.மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு
     விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த
     தடக் கையானை,
‘என் அத்த! என், நீ, இமையோரை
     முனிந்திலாதாய்,
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு
     ஏது?’ என்றான்.