பக்கம் எண் :

278அயோத்தியா காண்டம்

     (வசிட்டன்) வில் தடந் தாமரைக் செங்கண் வீரனை - வில் ஏந்திய
பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை;  உற்று
அடைந்து
- நெருங்கி வந்து;  ‘ஐய!-;  நீ ஒருவி - அரண்மனையை
விட்டு நீங்கி;  ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் - உயர்ந்த மலை
வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் - இட மகன்ற; மல் தடந்
தானையான்
- வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்’-
வாழ மாட்டான்; (இறந்துபடுவான்);  என்றான் -.                    161

இராமன் வசிட்டனுக்கு உரைத்த மறுமொழி  

1767.‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் -
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான்.

     பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய
படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன்
(முனிவனை நோக்கி);  ‘அன்னவன் -தயரதனது;  பணி தலை ஏந்தி
ஆற்றுதல்  என்னது  கடன்
- கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல்
எனது கடமையாகும்;  அவன் இடரை நீக்குதல் நின்னது  கடன் -
அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது  கடமையாகும்;
இது  நெறியும்’ - இது நீதியும்ஆகும்;’  என்றனன் -.

     அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன்
என்பதை அறிவிக்க, ‘பன்னகப்பாயலின் பள்ளி நீங்கினான்’ என்றார்.   162

வசிட்டன் மறுமொழி  

1768.‘ “ வெவ் வரம்பை இல் சுரம்
     விரவு” என்றான் அலன்;
தெவ்வர் அம்பு அனைய சொல்
     தீட்டினாள்தனக்கு,
அவ் அரம் பொருத வேல்
     அரசன், ஆய்கிலாது,
“இவ் வரம் தருவென்” என்று ஏன்றது
     உண்டு’ என்றான்.

     (அது கேட்ட வசிட்டன் இராமனை நோக்கி) ‘வெவ் - கொடிய;
வரம்பை இல் - எல்லை இல்லாத;  சுரம் - காட்டை;  விரவு’ - சேர்வாய்;
என்றான்அலன்’ - என்று உன்னைப் பார்த்து அரசன் சொன்னானில்லை;