பக்கம் எண் :

280அயோத்தியா காண்டம்

     என்றபின்- இராமன் இவ்வாறு  கூறிய பிறகு;  முனிவன் - வசிட்டன்;
ஒன்று  இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது;
நெடுங்கண் நீர்நிலத்து  நீர்த்து  உக - நீண்ட தன் கண் நீரானது
நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் - மலை
போன்ற தோள்களை உடைய இராமன்;  தொழுது- (முனிவனை) வணங்கி;
கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னாற
செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச்
சேர்ந்தான்.

     குன்றன தோளவனைப் தொழுது  கொற்றவனாய இராமன் நெடுமதில்
வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் ‘குன்றன
தோளவன்’ எனல்ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக.
நீர்த்து - நீரின் தன்மை. செய்து அதாவதுஈரம் செய்து என்பதாகும்.   165

மக்கள் துயரம்  

1771. சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்.,
முற்றிய உவகையன், முளரிப் போதினும்
குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ.

     சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்;
தொடரும் தம்பியன் - தன்னைப்  பின்பற்றிவரும் தம்பியோடு;  முற்றிய
உவகையன்
- நிரம்பியமகிழ்ச்சியுடன்;  முளரிப் போதினும் - தாமரை
மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு
செல்கின்ற  இராமனின்;  கொள்கை- மனக் கருத்தை;  கண்டவர் -
அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்ததுன்பத்தை;  ஒருவகை -
ஓரளவுக்கு;  உணர்த்துவாம் - சொல்லுவோம்.

     கான் புகும் இராமனது  முகமலர்ச்சி தாமரை மலரினும்பொலிந்தது
என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாறிற்று. ‘அரோ’
ஈற்றசை.                                                    166

1772. ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள்தாம்,
மொய் இளந் தளிர்களால் முளரிமேல் விழும்
மையலின் மதுகரம் கடியுமாறு என,
கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார்.

     அணங்கு அனார்கள் தாம் - தெய்வ மகளிரை  ஒத்த அயோத்தி
நகர மகளிர்;  ஐயனைக் காண்டலும் - (வனம் புகும் மரவுரி அணிந்த)
இராமனைக் கண்டவுடன்;  மொய்இளந்தளிர்களால் - நெருங்கி
இளமையான தளிர்களைக் கொண்டு;  முளரிமேல் விழும் -தாமரை