மலர்மேல் வந்து விழுகின்ற; மையலின் - கள்ளுண்ட மயக்கமுடைய; மதுகரம் - வண்டுகளை; கடியுமாறு என - ஒட்டும் தன்மை போல; கைகளின் - தம் கைகளால்; மதல்நெடுங்கண்கள் - செருக்கிய நீண்ட கண்களை; எற்றினார் - மோதினார்கள். தளிர்கள் -கைகள், தாமரை - முகம். வண்டு - கண்கள்,.ஓட்டுதல் - கை களால் மோதுதல் என உவமை காண்க. முடிசூட வேண்டிய அரச மகன்மரவுரி தரித்தகோலம் அவர்கள் கண்களாற் பார்க்கப் பொறுக்க முடியவில்லை; ஆதலின் இப்படிச் செய்தனர். 167 | 1773. | தம்மையும் உணர்ந்திலர் - தணிப்பு இல் அன்பினால் அம்மையின் இரு வினை அகற்றவோ? அன்றேல், விம்மிய பேர் உயிர் மீண்டிலாமைகொல்?- செம்மல்தன் தாதையின் சிலவர் முந்தினார். |
சிலவர்த - சிலர்; தணிப்பு இல் அன்பினால் - அடக்க முடியாத அன்பால்;தம்மையும் உணர்ந்திலர் - தம் நிலையையும் அறியாதவர் கள் ஆயினராய்; செம்மல்தன் தாதையின் - இராமபிரானது தந்தையாகிய அயரதனைவிட ; முந்தினார் -முற்பட்டு இறந்து விண் சென்றனர்; அம்மையின் - வருகின்ற பிறப்பில்; இருவினைஅறுக்கவோ? - இருவினைகளையும் இல்லாமல் நீக்கிக்கொள்ளவா; அன்றேல் - அப்படி இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் - பிரிவினால் துடித்தஅரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ. சென்ற உயிர் இனித் திரும்பாமல் மீளா உலகம் சேர்ந்ததுஆகலின், ‘இரு வினை அகற்றவோ’ என்றார். இருவினை அற்றவர் மீளா உலகம் சேர்வர்ஆதலின். 168 | 1774. | விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல் எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர்; சிலர் பதைத்து, அளகவல்லியின் கொழுந்து எரி உற்றென, துயரம் கூர்கின்றார். |
சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் - சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர் -முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் - மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென - நுனிதீப்பற்றியது போல; துயரம் கூர்கின்றார் - துன்பம் மிகுகின்றார். |